அரசு ஊழியா்களின் வாரிசுகளுக்கும் திருமண முன்பணம்: தமிழக அரசு உத்தரவு
அங்கீகரிக்கப்படாத தனிப்படைகளை கலைப்பு: டிஜிபி
தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்படாத தனிப்படைகளை கலைக்க தமிழக காவல் துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் கோயிலுக்கு வந்த பக்தரின் நகை காணாமல் போன விவகாரத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட கோயில் காவலாளி அஜத்குமார் காவல் துறையினரின் விசாரணையில் உயிரிழந்தார்.
ஆனால், அவர் வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து விடியோவும் வெளியான நிலையில், இச்சம்பவத்தில் 5 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அனைத்து மாவட்டங்களிலும் எஸ்.பி மற்றும் டி.எஸ்.பி கட்டுப்பாட்டில் தனிப்படைகள் இருப்பது வழக்கமானது.
இந்நிநிலையில் அஜித்குமார் லாக்கப் மரணத்தின் எதிரொலியாக மாவட்ட எஸ்.பி, டி.எஸ்.பிக்கள், காவல் ஆய்வாளர்கள் கீழ் செயல்படும் அங்கீகரிக்கப்படாத சிறப்புப் படைகளை கலைக்க டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
குற்றச்சம்பவங்கள் நடைபெறும் பொழுது வழக்கின் தன்மைக்கு ஏற்ப தனிப்படைகள் அமைத்து விசாரிக்க வேண்டும். தனிப்படைகளை வைத்துக் கொண்டு விசாரணை நடத்தக் கூடாது என ஐ.ஜிக்கள் மூலம் வாய்மொழி உத்தரவாக இந்த அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.