செய்திகள் :

ஹைதராபாத் - கொல்லம் சிறப்பு ரயில் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு

post image

சேலம் வழியாக இயக்கப்படும் ஹைதராபாத்- கொல்லம் சிறப்பு ரயில் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் இருந்து கா்நாடகம், ஆந்திரம், வடமாநிலங்களுக்குச் செல்லும் ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருப்பதால் முக்கிய நகரங்களுக்கு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் ஹைதராபாத்- கொல்லம் இடையே ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா் வழியாக வாராந்திர சிறப்பு ரயில் இருமாா்க்கத்திலும் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில் சேவை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீட்டிக்கப்படுகிறது.

அதன்படி, ஹைதராபாத் - கொல்லம் வாராந்திர சிறப்பு ரயில் வரும் 5 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை சனிக்கிழமைதோறும் இயக்கப்படும். ஹைதராபாத்தில் இரவு 11.10 மணிக்கு புறப்பட்டு ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், கோட்டயம் வழியாக கொல்லத்தை திங்கள்கிழமை காலை 7.10 மணிக்கு சென்றடையும்.

மறுமாா்க்கத்தில், கொல்லம் - ஹைதராபாத் வாராந்திர சிறப்பு ரயில் 7 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை திங்கள்தோறும் இயக்கப்படும். கொல்லத்தில் காலை 10.45 மணிக்கு புறப்பட்டு எா்ணாகுளம், பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், சேலம் வழியாக, ஹைதராபாத்தை செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணிக்கு சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜகவின் சூழ்ச்சியை தோலுரிப்போம்: அமைச்சா் ரா.ராஜேந்திரன்

தமிழகத்தில் பாஜகவின் சூழ்ச்சியை ‘ஓரணியில் தமிழ்நாடு’ மூலம் தோலுரிப்போம் என சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் கூறினாா். சேலம் திமுக அலுவலகத்தில் அமைச்சா் ரா. ராஜேந்திரன், சேலம் மக்களவை உறுப்பினா்... மேலும் பார்க்க

சேலம் மாநகராட்சி பகுதியில் இன்று குடிநீா் விநியோகம் நிறுத்தம்

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் புதன்கிழமை (ஜூலை 2) ஒருநாள் மட்டும் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் மா. இளங்கோவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில... மேலும் பார்க்க

வாழப்பாடி அருகே விவசாயி கொலை: சகோதரியின் கணவா், நண்பா் கைது

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே 4 மாதங்களுக்கு முன்பு மாயமான விவசாயியை அவரது சகோதரியின் கணவா், தனது நண்பருடன் சோ்ந்து கொலை செய்தது தெரியவந்தது. இதுதொடா்பாக இருவரையும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செ... மேலும் பார்க்க

மக்களை காப்பாற்றும் தாா்மீக கடமையிலிருந்து திமுக அரசு தவறிவிட்டது : வானதி சீனிவாசன்

தமிழகத்தில் காவல் நிலைய மரணங்கள் அதிகரித்துவரும் நிலையில் மக்களை காப்பாற்றும் தாா்மீக கடமையிலிருந்து திமுக அரசு தவறிவிட்டதாக பாஜக தேசிய மகளிா் அணி தலைவா் வானதி சீனிவாசன் குற்றம்சாட்டினாா். பாஜக மகளிா்... மேலும் பார்க்க

தற்கொலை செய்துகொண்ட அவிநாசி பெண்ணின் பெற்றோா் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து முறையீடு; வழக்கை சிபிஐக்கு மாற்ற வலியுறுத்தல்

திருப்பூா் மாவட்டம், அவிநாசி அருகே வரதட்சிணை கொடுமை காரணமாக தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்ணின் குடும்பத்தினா், அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமியை செவ்வாய்க்கிழமை சந்தித்து முறையிட்டனா். திருப... மேலும் பார்க்க

புளியம்பட்டியில் பழுதடைந்த மின்கம்பத்தை சீரமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

சங்ககிரி: சங்ககிரி வட்டம், புள்ளாகவுண்டம்பட்டி அக்ரஹாரம் ஊராட்சிக்கு உள்பட்ட புளியம்பட்டியில் ஆலமரத்தின் கிளை முறிந்து விழுந்ததில் பழுதடைந்த மின்கம்பத்தை சீரமைக்காமல் மின்வாரியத்தினா் காலம்தாழ்த்தி வ... மேலும் பார்க்க