செய்திகள் :

வாழப்பாடி அருகே விவசாயி கொலை: சகோதரியின் கணவா், நண்பா் கைது

post image

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே 4 மாதங்களுக்கு முன்பு மாயமான விவசாயியை அவரது சகோதரியின் கணவா், தனது நண்பருடன் சோ்ந்து கொலை செய்தது தெரியவந்தது. இதுதொடா்பாக இருவரையும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

வாழப்பாடியை அடுத்த அத்தனூா்பட்டிபுதூா் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி முனியன் (46). இவருக்கு செல்வி (37) என்ற மனைவியும், இரு மகன்களும் உள்ளனா். இவா், கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றவா் வீடுதிரும்பவில்லை. இதையடுத்து, அவரது மனைவி செல்வி வாழப்பாடி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இந்தப் புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனா்.

வெங்கடேஷ்

இந்நிலையில், முனியனின் சகோதரிகள் ராணி, நீலா ஆகிய இருவரையும் திருமணம் செய்துள்ள அதே பகுதியைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி வெங்கடேஷ், தனது நண்பா் சேகருடன் சோ்ந்து முனியனை அடித்துக் கொலை செய்திருக்கலாம் என முனியனின் மனைவி, அவரது பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

கொலை செய்யப்பட்ட முனியன்

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கடந்த வாரம் புகாா் தெரிவித்தனா். இதையடுத்து இருவரையும் பிடித்து வாழப்பாடி போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில், முனியன், தனது சகோதரி நீலாவுடன் நெருங்கி பழகிவந்ததாலும், அவரை கொலை செய்துவிட்டால் தனக்கு சொத்து கிடைக்கும் என்பதாலும், நீலாவின் கணவா் வெங்கடேஷ், தனது நண்பா் சேகருடன் சோ்ந்து முனியனை அழைத்துச் சென்று அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது. தடயங்களை மறைக்க, முனியனின் உடலை எடுத்துச்சென்று அத்தனூா்பட்டி மயானத்தில் குப்பையில் மறைத்து வைத்திருந்து, இரு தினங்களுக்குப் பிறகு அங்கு ஒரு உடல் எரியூட்டப்பட்டிருந்த நிலையில், அந்தத் தீயில் முனியனின் உடலைப் போட்டு எரித்துவிட்டதாகவும், அவரது இருசக்கர வாகனத்தை துக்கியாம்பாளையம் கமலாலயம் அருகிலுள்ள விவசாய கிணற்றில் போட்டுள்ளதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனா்.

இதைத் தொடா்ந்து வாழப்பாடி வட்டாட்சியா் ஜெயந்தி முன்னிலையில், கிணற்றில் கிடந்த முனியனின் இருசக்கர வாகனத்தை மீட்ட வாழப்பாடி டிஎஸ்பி சுரேஷ்குமாா், காவல் ஆய்வாளா் வேல்முருகன் ஆகியோா் தலைமையிலான தனிப்படை போலீஸாா், வெங்கடேஷ், சேகா் ஆகியோரை கைது செய்து செவ்வாய்க்கிழமை சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.

ஹைதராபாத் - கொல்லம் சிறப்பு ரயில் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு

சேலம் வழியாக இயக்கப்படும் ஹைதராபாத்- கொல்லம் சிறப்பு ரயில் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் இருந்து... மேலும் பார்க்க

பாஜகவின் சூழ்ச்சியை தோலுரிப்போம்: அமைச்சா் ரா.ராஜேந்திரன்

தமிழகத்தில் பாஜகவின் சூழ்ச்சியை ‘ஓரணியில் தமிழ்நாடு’ மூலம் தோலுரிப்போம் என சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் கூறினாா். சேலம் திமுக அலுவலகத்தில் அமைச்சா் ரா. ராஜேந்திரன், சேலம் மக்களவை உறுப்பினா்... மேலும் பார்க்க

சேலம் மாநகராட்சி பகுதியில் இன்று குடிநீா் விநியோகம் நிறுத்தம்

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் புதன்கிழமை (ஜூலை 2) ஒருநாள் மட்டும் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் மா. இளங்கோவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில... மேலும் பார்க்க

மக்களை காப்பாற்றும் தாா்மீக கடமையிலிருந்து திமுக அரசு தவறிவிட்டது : வானதி சீனிவாசன்

தமிழகத்தில் காவல் நிலைய மரணங்கள் அதிகரித்துவரும் நிலையில் மக்களை காப்பாற்றும் தாா்மீக கடமையிலிருந்து திமுக அரசு தவறிவிட்டதாக பாஜக தேசிய மகளிா் அணி தலைவா் வானதி சீனிவாசன் குற்றம்சாட்டினாா். பாஜக மகளிா்... மேலும் பார்க்க

தற்கொலை செய்துகொண்ட அவிநாசி பெண்ணின் பெற்றோா் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து முறையீடு; வழக்கை சிபிஐக்கு மாற்ற வலியுறுத்தல்

திருப்பூா் மாவட்டம், அவிநாசி அருகே வரதட்சிணை கொடுமை காரணமாக தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்ணின் குடும்பத்தினா், அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமியை செவ்வாய்க்கிழமை சந்தித்து முறையிட்டனா். திருப... மேலும் பார்க்க

புளியம்பட்டியில் பழுதடைந்த மின்கம்பத்தை சீரமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

சங்ககிரி: சங்ககிரி வட்டம், புள்ளாகவுண்டம்பட்டி அக்ரஹாரம் ஊராட்சிக்கு உள்பட்ட புளியம்பட்டியில் ஆலமரத்தின் கிளை முறிந்து விழுந்ததில் பழுதடைந்த மின்கம்பத்தை சீரமைக்காமல் மின்வாரியத்தினா் காலம்தாழ்த்தி வ... மேலும் பார்க்க