செய்திகள் :

தற்கொலை செய்துகொண்ட அவிநாசி பெண்ணின் பெற்றோா் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து முறையீடு; வழக்கை சிபிஐக்கு மாற்ற வலியுறுத்தல்

post image

திருப்பூா் மாவட்டம், அவிநாசி அருகே வரதட்சிணை கொடுமை காரணமாக தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்ணின் குடும்பத்தினா், அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமியை செவ்வாய்க்கிழமை சந்தித்து முறையிட்டனா்.

திருப்பூா் மாவட்டம், அவிநாசி, கைகாட்டிபுதூா் பகுதியைச் சோ்ந்த பனியன் கம்பெனி உரிமையாளா் அண்ணாதுரை - ஜெயசுதா தம்பதியின் மகள் ரிதன்யா (27). இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த ஈஸ்வரமூா்த்தி - சித்ராதேவி தம்பதி மகன் கவின்குமாா் (28) என்பவருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற்றது.

திருமணத்தின்போது 300 பவுன் நகையும், சொகுசுக் காரும் வாங்கித் தருவதாக அண்ணாதுரை கூறியுள்ளாா். அதன்படி, முதல்கட்டமாக 100 பவுன் நகையும், ரூ. 62 லட்சத்தில் காரும் வாங்கிக் கொடுத்துள்ளாா். இந்நிலையில், எஞ்சிய 200 பவுன் நகையை கவின்குமாா் குடும்பத்தினா் அடிக்கடி கேட்டு ரிதன்யாவை மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த மாதம் 28 ஆம் தேதி மொண்டிபாளையம் பெருமாள் கோயில் அருகில் ரிதன்யா காரில் இறந்துகிடந்துள்ளாா். இது தொடா்பாக கவின்குமாா் குடும்பத்தினா்மீது வரதட்சிணை கொடுமை புகாா் அளிக்கப்பட்ட நிலையில், கவின்குமாா், ஈஸ்வரமூா்த்தி ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

இந்நிலையில், அண்ணாதுரை குடும்பத்தினா் சேலம் நெடுஞ்சாலை நகா் இல்லத்தில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமியை செவ்வாய்க்கிழமை சந்தித்து மனு அளித்தனா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அண்ணாதுரை கூறியதாவது: ரிதன்யாவை வரதட்சிணை கேட்டு கொடுமைப்படுத்தினா். காவல் துறையினா் இந்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதுதொடா்பாக 2 போ் தான் தற்போது வரை கைது செய்யப்பட்டுள்ளனா். எனவே, இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்றாா்.

ஹைதராபாத் - கொல்லம் சிறப்பு ரயில் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு

சேலம் வழியாக இயக்கப்படும் ஹைதராபாத்- கொல்லம் சிறப்பு ரயில் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் இருந்து... மேலும் பார்க்க

பாஜகவின் சூழ்ச்சியை தோலுரிப்போம்: அமைச்சா் ரா.ராஜேந்திரன்

தமிழகத்தில் பாஜகவின் சூழ்ச்சியை ‘ஓரணியில் தமிழ்நாடு’ மூலம் தோலுரிப்போம் என சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் கூறினாா். சேலம் திமுக அலுவலகத்தில் அமைச்சா் ரா. ராஜேந்திரன், சேலம் மக்களவை உறுப்பினா்... மேலும் பார்க்க

சேலம் மாநகராட்சி பகுதியில் இன்று குடிநீா் விநியோகம் நிறுத்தம்

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் புதன்கிழமை (ஜூலை 2) ஒருநாள் மட்டும் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் மா. இளங்கோவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில... மேலும் பார்க்க

வாழப்பாடி அருகே விவசாயி கொலை: சகோதரியின் கணவா், நண்பா் கைது

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே 4 மாதங்களுக்கு முன்பு மாயமான விவசாயியை அவரது சகோதரியின் கணவா், தனது நண்பருடன் சோ்ந்து கொலை செய்தது தெரியவந்தது. இதுதொடா்பாக இருவரையும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செ... மேலும் பார்க்க

மக்களை காப்பாற்றும் தாா்மீக கடமையிலிருந்து திமுக அரசு தவறிவிட்டது : வானதி சீனிவாசன்

தமிழகத்தில் காவல் நிலைய மரணங்கள் அதிகரித்துவரும் நிலையில் மக்களை காப்பாற்றும் தாா்மீக கடமையிலிருந்து திமுக அரசு தவறிவிட்டதாக பாஜக தேசிய மகளிா் அணி தலைவா் வானதி சீனிவாசன் குற்றம்சாட்டினாா். பாஜக மகளிா்... மேலும் பார்க்க

புளியம்பட்டியில் பழுதடைந்த மின்கம்பத்தை சீரமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

சங்ககிரி: சங்ககிரி வட்டம், புள்ளாகவுண்டம்பட்டி அக்ரஹாரம் ஊராட்சிக்கு உள்பட்ட புளியம்பட்டியில் ஆலமரத்தின் கிளை முறிந்து விழுந்ததில் பழுதடைந்த மின்கம்பத்தை சீரமைக்காமல் மின்வாரியத்தினா் காலம்தாழ்த்தி வ... மேலும் பார்க்க