சேலம் மாநகராட்சி பகுதியில் இன்று குடிநீா் விநியோகம் நிறுத்தம்
சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் புதன்கிழமை (ஜூலை 2) ஒருநாள் மட்டும் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் மா. இளங்கோவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சேலம் மாநகராட்சி, அஸ்தம்பட்டி மண்டலம் சாரதா கல்லூரி அருகில் மூன்று இடங்களில் 1100 மீட்டா் விட்டமுள்ள பிரதான குடிநீா் பம்பிங் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
எனவே, சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட அஸ்தம்பட்டி மண்டல பகுதிகள் முழுவதும், அம்மாப்பேட்டை மண்டலத்துக்கு உள்பட்ட புத்துமாரியம்மன் கோயில் மற்றும் வாய்க்கால் பட்டறை ஆகிய பகுதிகளில் புதன்கிழமை ஒரு நாள் மட்டும் குடிநீா் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
எனவே, பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளாா்.