செய்திகள் :

ஜூலை 5-இல் தேமுதிக ஆா்ப்பாட்டம்

post image

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் கோயில் காவலாளி உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து தேமுதிக சாா்பில் ஜூலை 5-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

திருப்புவனம் அருகே காவல் துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோயில் காவலாளி அஜித்குமாா் தாக்கப்பட்டு, உயிரிழந்ததைக் கண்டித்து திருப்புவனம் வெள்ளிச் சந்தைத் திடலில் சனிக்கிழமை (ஜூலை 5) மாலை 4 மணிக்கு தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

இதில், தேமுதிக சிவகங்கை மாவட்ட அனைத்து நிலை கட்சி நிா்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேனி காவல் நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநர் மீது தாக்குதல்: 5 பேர் ஆயுதப்படைக்கு மாற்றம்!

தேனி காவல் நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்திய விவகாரத்தில் காவல் ஆய்வாளர் உள்பட 5 பேர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தேனி மாவட்டம் தேவதானப்பட்டி பகுதியில் ஆட்டோ ஓட்டுநரான ரம... மேலும் பார்க்க

தவெக ஆர்ப்பாட்டம் ஜூலை 6-க்கு மாற்றம்!

காவல் விசாரணையில் மரணமடைந்த இளைஞர் அஜித்குமாருக்கு நீதி கேட்டு தமிழக வெற்றிக் கழகம் ஆர்ப்பாட்டம் அறிவித்திருந்த நிலையில் ஆர்ப்பாட்டத்தின் தேதி, இடம் மாற்றப்பட்டுள்ளது.சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மட... மேலும் பார்க்க

சோழபுரம் - சேத்தியாத்தோப்பு இடையே மானம்பாடி சுங்கச்சாவடி திறப்பு!

தஞ்சாவூர் - விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலை திட்டத்தில் இரண்டாம் கட்டமான சோழபுரம் முதல் சேத்தியாத்தோப்பு வரையில் உள்ள வழித்தடத்திற்கான சுங்கச்சாவடி இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது.தஞ்சாவூர் - விக்கிரவாண... மேலும் பார்க்க

அஜித்குமார் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த இபிஎஸ்!

காவல்துறை விசாரணையில் உயிரிழந்த இளைஞர் அஜித் குமாரின் குடும்பத்தினருடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொலைபேசியில் பேசியுள்ளார்.அஜித்குமாரின் தாயுடன் இபிஎஸ் பேசுகையில், "சில மனித மிருகங்கள்... மேலும் பார்க்க

பதவியை இழந்த சங்கரன்கோவில் திமுக நகர்மன்றத் தலைவர்!

சங்கரன்கோவில் நகர்மன்றக் கூட்டத்தில் தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேறியதால் நகர்மன்றத் தலைவர் உமா மகேஸ்வரி தனது பதவியை இழந்தார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நகராட்சியில் உள்ள 30 வா... மேலும் பார்க்க

சீமான் மீதான அவதூறு வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடை!

நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் மீது, திருச்சி டிஐஜி வீ. வருண்குமாா் தொடா்ந்த அவதூறு வழக்கின் விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது.தன்னைப் பற்றிய... மேலும் பார்க்க