செய்திகள் :

பதவியை இழந்த சங்கரன்கோவில் திமுக நகர்மன்றத் தலைவர்!

post image

சங்கரன்கோவில் நகர்மன்றக் கூட்டத்தில் தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேறியதால் நகர்மன்றத் தலைவர் உமா மகேஸ்வரி தனது பதவியை இழந்தார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நகராட்சியில் உள்ள 30 வார்டுகளில் அதிமுகவைச் சேர்ந்த 13 நகர மன்ற உறுப்பினர்களும் திமுக - 9 அதன் கூட்டணியான மதிமுக - 2, காங்கிரஸ் - 1, எஸ்டிபிஐ - 1 மற்றும் சுயேச்சை உறுப்பினர்கள் 4 பேர் உள்ளனர்.

முன்னதாக நகராட்சித் தலைவர் போட்டியில் திமுக கூட்டணி சார்பில் 15 வாக்குகளும் அதிமுக சார்பில் 15 வாக்குகளும் சமமாக வாக்குகள் இருந்ததால் குலுக்கல் முறையில் திமுகவினரால் அறிவிக்கப்பட்ட உமா மகேஸ்வரி நகர்மன்றத் தலைவராக அறிவிக்கப்பட்டார்.

நகர்மன்றத் தலைவர் உமா மகேஸ்வரி, நகர்மன்ற உறுப்பினர்களின் வார்டுகளில் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுப்பதில்லை, ஒரு சார்பாக நடந்துகொள்கிறார் என அதிமுக கவுன்சிலர்கள் தொடர்ந்து குற்றச்சாட்டை முன்வைத்து வந்தனர்.

தொடர்ந்து, அதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள் மட்டுமல்லாமல் தங்கள் வார்டுகளுக்கு எதுவும் வசதி செய்துகொடுப்பதில்லை என அதிருப்தியான சில திமுக கவுன்சிலர்களும் குற்றம்சாட்டினர்.

இந்நிலையில் நகர்மன்றத் தலைவர் உமா மகேஸ்வரி சரவணன் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர 24 கவுன்சிலர்கள் நகராட்சி ஆணையரிடம் மனு அளித்திருந்தனர்.

அதன் அடிப்படையில் இன்று நடந்த நகர்மன்றக் கூட்டத்தில் வாக்கெடுப்பு நடைபெற்றது.

உமா மகேஸ்வரி தவிர நகர்மன்ற வாக்கெடுப்பு கூட்டத்திற்கு 29 நகர்மன்ற உறுப்பினர்கள் வந்த நிலையில் 28 பேர் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர், ஒருவர் மட்டுமே உமா மகேஸ்வரிக்கு ஆதரவாக வாக்களித்தார்.

நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேறியுள்ளதால் நகர்மன்ற தலைவர் பதவியை உமாமகேஸ்வரி இழந்துள்ளார்.

துணைத் தலைவராக உள்ள கண்ணன் தற்போது நகர்மன்றத் தலைவராக செயல்படுவார்.

விரைவில் நகர்மன்றத் தலைவரை கவுன்சிலர்கள் தேர்வு செய்ய உள்ளனர்.

திமுக நகர்மன்றத் தலைவருக்கு எதிராக திமுக கவுன்சிலர்களே வாக்களித்துள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Sankarankovil Municipal Council Chairperson Uma Maheshwari lost her position after a no-confidence motion against her was passed in the Sankarankovil Municipal Council meeting.

போலீஸ் தனிப்படைகள் கலைப்பு - டிஜிபி உத்தரவு

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் கோயில் காவலாளி போலீஸாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் எதிரொலியாக, காவல் நிலையங்களில் உரிய அனுமதியின்றி அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் தனிப்படைகளைக் கலைக்கும்படி தமிழ... மேலும் பார்க்க

தமிழகத்தில் நிகழாண்டில் 129 போ் உடல் உறுப்புகள் தானம்: 725 பேருக்கு மறுவாழ்வு

தமிழகத்தில் நிகழாண்டில் மூளைச்சாவு அடைந்த 129 பேரின் உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு 725 பேருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக மாநில உறுப்பு மாற்று ஆணையத்தின் உறுப்பினா் செயலா் டாக்ட... மேலும் பார்க்க

34 பேரூராட்சிகளை தரம் உயர்த்தி அரசு அறிவிப்பு!

தமிழ்நாட்டில் 34 பேரூராட்சிகளை தரம் உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம், 10 தேர்வு நிலை பேரூராட்சிகள் சிறப்பு நிலை பேரூராட்சிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.இது குறித்து தமிழக அரசு வெளியி... மேலும் பார்க்க

அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை, 15 மாவட்டங்களில் மழை!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவி... மேலும் பார்க்க

சென்னை, புறநகரில் பரவலாக மழை!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.சென்னை ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, வடபழனி, வளசரவாக்கம், போரூர், கோயம்பேடு, அண்ணாநகர், வேளச்சேரி, அமைந்தகரை, அரும்பாக்கம் உள்ளிட்டப் பகுதிகள... மேலும் பார்க்க

அஜித்குமார் குடும்பத்திற்கு விஜய் ஆறுதல்!

காவல் துறை விசாரணையில் கொல்லப்பட்ட அஜித்குமார் இல்லத்துக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். மேலும் பார்க்க