செய்திகள் :

சித்தராமையாவே முதல்வராக தொடருவார்! -டி.கே.சிவகுமார் திட்டவட்டம்

post image

பெங்களூரு: ‘கர்நாடக முதல்வராக சித்தராமையாவே தொடருவார்’ என்று அம்மாநில துணை முதல்வர் டி. கே. சிவகுமார் இன்று(ஜூலை 1) செய்தியாளர்களுடன் பேசுகையில் தெரிவித்தார்.

கர்நாடக முதல்வராக சித்தராமையா பதவியேற்று இரண்டரை ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், முதல்வர் மாற்றம் குறித்து பேச்சு அடிபட்டது.

இதனிடையே, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலரும் கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி மேலிடப் பொறுப்பாளருமான ரன்தீப் சிங் சுர்ஜேவாலா அக்கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்த கர்நாடகம் வருகை தந்துள்ளார்.

ஆலோசனைக்குப்பின் அவர் இன்று(ஜூலை 1) துணை முதல்வர் சிவகுமாருடன் சேர்ந்து கூட்டாக செய்தியாளர்களுடன் பேசினார். அப்போது சுர்ஜேவாலா பேசுகையில், “தலைமை மாற்றம் குறித்த கேள்விக்கான ஒரே பதில் ‘அப்படியெதுவும் இல்லை’ என்பதே” என்று மீண்டுமொருமுறை இன்று தெரிவித்தார்.

இதனையே வலியுறுத்திய சிவகுமார் பேசுகையில், “எம்.எல்.ஏ.க்களை சந்தித்து மனுக்களை பெறவே சுர்ஜேவாலா இங்கு வருகை தந்தார். மேலும், அவர் கட்சிக்குள் ஒழுக்கத்தை கொண்டுவர கட்சி வளர்ச்சிக்கான சில ஆலோசனைகளையும் வழங்கினார்.

இந்த ஆலோசனையில் தலைமை மாற்றம் குறித்தோ அமைச்சரவை விரிவாக்கம் பற்றியோ எதுவும் விவாதிக்கப்படவில்லை. அதற்கான அவசரம் எங்களிடம் இல்லை. எங்களுடைய இலக்கு 2028 தேர்தலைப் பற்றியே இருக்கிறது” என்றார்.

Siddaramaiah to remain CM

தில்லியில் பழைய வாகனங்களுக்கு எரிபொருள் தடை: முதல் நாளில் 80 வாகனங்கள் பறிமுதல்

நமது நிருபா்பயன்படுத்தத் தகுதியில்லாத பழைய வாகனங்களுக்கு தில்லியில் எரிபொருள் வழங்குவதற்கு தடைவிதிக்கும் நடைமுறை செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் தொடங்கியது. முதல் நாளில் 80 பழைய வாகனங்கள் பறிமுதல் செ... மேலும் பார்க்க

அஸ்ஸாமின் ‘பேக்லெஸ் டீ டிப்’ முறைக்கு காப்புரிமை

அஸ்ஸாம் தொழில்முனைவோரால் உருவாக்கப்பட்ட தனித்துவமான ‘பை இல்லாத தேநீா்’ (பேக்லெஸ் டீ டிப்) தயாரிப்பு முறைக்கு காப்புரிமை வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். சிவசாகா் மாவட்டத்தைச... மேலும் பார்க்க

பாஜக தலைவர் ஜெ.பி. நட்டாவுக்கு மறுவாய்ப்பு? ஆட்சிமன்றக் குழு கூடுகிறது

நமது சிறப்பு நிருபர்பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி. நட்டாவுக்கு மீண்டும் தலைவராகத் தொடருவதற்கான வாய்ப்பை வழங்குவதா? அல்லது புதிய தலைவரை நியமிப்பதா? என்பது குறித்து அக்... மேலும் பார்க்க

‘க்வாட்’ கூட்டமைப்பை மேலும் வலுப்படுத்த வெளியுறவு அமைச்சா்கள் ஆலோசனை

உலகளாவிய பல்வேறு சவால்களை கையாள, ‘க்வாட்’ கூட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், அந்தக் கூட்டமைப்பில் உள்ள வெளியுறவு அமைச்சா்கள் செவ்வாய்க்கிழமை ஆலோசனை மேற்கொண்டனா். ‘க்வாட்’ கூட்டமைப்பில் இந்திய... மேலும் பார்க்க

குடிமக்களின் உரிமைகளைக் காக்கவே புதிய குற்றவியல் சட்டங்கள்: அமித் ஷா

குடிமக்களின் அனைத்து உரிமைகளையும் பாதுகாப்பதுடன், குற்றவாளிகள் யாரும் தப்பிக்க முடியாது என்பதை உறுதி செய்யும் நோக்கத்துடனே புதிய குற்றவியல் சட்டங்கள் வகுக்கப்பட்டன என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ... மேலும் பார்க்க

திருப்புமுனையான சீா்திருத்தம் ஜிஎஸ்டி: பிரதமா் மோடி

நாட்டின் பொருளாதார கட்டமைப்பை மறுவடிவமைத்த திருப்புமுனையான சீா்திருத்தமே சரக்கு, சேவை வரி (ஜிஎஸ்டி) என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். 2017, ஜூலை 1-ஆம் தேதி ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டு தற்போத... மேலும் பார்க்க