செய்திகள் :

Rishabh Pant: "விபத்துக்குப் பின் கண்விழித்ததும் பண்ட் முதலில் கேட்டது..!" - பகிரும் மருத்துவர்

post image

இந்திய டெஸ்ட் அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட் கடந்த 2022 டிசம்பரில் டெல்லியிலிருந்து தனது சொந்த ஊருக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது சாலை விபத்துக்குள்ளானார்.

அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பண்ட் 632 நாள்கள் கழித்து வங்கதேசத்துக்கெதிரான டெஸ்ட் போட்டியின் மூலம் சர்வதேச போட்டியில் களமிறங்கி அப்போட்டியிலேயே சதமடித்து அசத்தினார்.

ரிஷப் பண்ட்
ரிஷப் பண்ட்

அதன்பிறகு, 2024 டி20 உலகக் கோப்பை, பார்டர் கவாஸ்கர் தொடர் ஆகியவற்றைத் தொடர்ந்து, தற்போது இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் இரு இன்னிங்ஸிலும் சதமடித்து அடுத்த போட்டிக்கு இன்னும் தீவிரமாகத் தயாராகியிருக்கிறார்.

இந்த நிலையில், விபத்தில் சிக்கிய பிறகு மருத்துவமனையில் கண்விழித்ததும் பண்ட் கேட்ட முதல் கேள்வி என்னவென்று அவருக்கு சிகிச்சையளித்த பிரபல எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் டின்ஷா பர்திவாலா பகிர்ந்திருக்கிறார்.

தி டெலிகிராப் ஊடகத்திடம் பேசிய டின்ஷா பர்திவாலா, "பண்ட் முதல் கேள்வியாக, "நான் மீண்டும் விளையாட முடியுமா?" என்று கேட்டார்.

அவரின் தாயார், "அவர் மீண்டும் நடக்க முடியுமா?" என்று கேட்டார்.

ஆனால், அவரின் காலில் காயங்கள் அதிகமாக இருந்ததால் முழங்காலில் முழுமையான மறுசீரமைப்பு தேவைப்பட்டது.

ரிஷப் பண்ட் கார் விபத்து
ரிஷப் பண்ட் கார் விபத்து

அறுவை சிகிச்சை எல்லாம் முடிந்த பிறகு அவரால் பல்கூட துலக்க முடியவில்லை.

அவரால் உண்மையில் தனது கைகளை அசைக்க முடியவில்லை. அவை முற்றிலும் வீங்கியிருந்தன.

படிப்படியாக அவர் பிறரின் உதவியில்லாமல் தண்ணீர் குடிக்கத் தொடங்கினார்.

பின்னர் நான்கு மாதங்களுக்குப் பிறகு ஊன்றுகோல் இல்லாமல் அவரால் நடக்க முடிந்தது.

ஆனால், பண்ட் மீண்டும் கிரிக்கெட் விளையாட முடியுமா என்று சந்தேகம் எழுந்தது.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவரிடம் விவாதித்தபோது, "முதல் அதிசயம் நீங்கள் உயிருடன் இருக்கிறீர்கள், இரண்டாவது அதிசயம் உங்கள் கால்கள் சரியாகிவிட்டன.

ஒருவேளை நீங்கள் மீண்டும் கிரிக்கெட்டுக்குத் திரும்பினால் அது மூன்றாவது அதிசயமாக இருக்கும்.

எல்லாவற்றிற்கும் நம்பிக்கையுடன் இருப்போம். சரியான நேரத்தில் அடித்து ஓர் அடி எடுத்து வைப்போம்" என்றேன்.

ரிஷப் பண்ட்
ரிஷப் பண்ட்

அப்போது அவர், "சரி அவ்வாறு நடக்கிறது என்றால் அதற்கு எவ்வளவு நாள்கள்?" என்று கேள்வியெழுப்ப, "கிரிக்கெட்டுக்கு திரும்ப 18 மாதங்கள் ஆகும்" என்று நான் கூறினேன்.

அவரின் முழு எண்ணமும் "முடிந்தவரை விரைவாக என்னை இயல்பு நிலைக்குத் திரும்பச் செய்யுங்கள்" என்பதுதான்.

அதற்கு, எங்களால் முடிந்ததை நாங்கள் செய்கிறோம் என்பதை உறுதிப்படுத்த முயற்சித்தோம்.

அவர் மீண்டு வந்தது நாங்கள் எதிர்பார்த்ததை விட மிக வேகமாக நடந்தது. அதற்காக, சாதாரண நபர்களை விடவும் கடினமாக அவர் உழைத்தார்" என்று கூறினார்.

Rohit Sharma: `இரவெல்லாம் தூங்கவில்லை, பதட்டமாக இருந்தேன்' - ரோஹித்தின் டி 20 உலக கோப்பை நினைவுகள்

ஜூன் 29, 2024-ல் இந்திய கிரிக்கெட் அணி 11 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக் கோப்பையை வென்று சாதனைப் படைத்தது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அந்த விறுவிறுப்பான போட்டியில் இந்தியா வெறும் 7 ரன்கள் வித்தியா... மேலும் பார்க்க

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அதிரடி ஆட்டம்; மதுரை பேந்தர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி நடை

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள NPR கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற ஸ்ரீராம் கேபிட்டல் தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) கிரிக்கெட் போட்டியில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி மதுரை பேந்தர்ஸ் அணியை டக்வ... மேலும் பார்க்க

TNPL சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அதிரடி ஆட்டம்.. மதுரை பேந்தர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி | Photo Album

Dindigul TNPL Dindigul TNPL Dindigul TNPL Dindigul TNPL Dindigul TNPL Dindigul TNPL Dindigul TNPL Dindigul TNPL Dindigul TNPL Dindigul TNPL Dindigul TNPL Dindigul TNPL Dindigul TNPL Dindigul TNPL Dind... மேலும் பார்க்க

``தேவைப்படும்போது வீட்டுக்கே வந்து அழைப்பார்கள்" 2015-ல் பயிற்சியாளரிடம் ரிஷப் பண்ட் சொன்ன பதில்

இந்திய அணி இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஜூன் 20 முதல் 24 வரை நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.இப்போட்டியில் இந்திய ... மேலும் பார்க்க

`2024 T20 WC பைனலில் அவரைப் பெரிதாக யாரும் பேசுவதில்லை’ - நோ கோலி, பும்ரா; ரோஹித் கூறும் வீரர் யார்?

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 2023-ல் சொந்த மண்ணில் ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த அடுத்த ஆண்டே, டி20 உலகக் கோப்பையை வென்றது.அந்த இறுதிப்போட்டியில் கடைசி 24 பந்துகளில் வெறும்... மேலும் பார்க்க

TNPL 2025: பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்ற திண்டுக்கல் டிராகன்ஸ் | Photo Album

TNPL-2025:நெல்லை ராயல் கிங்ஸ் அணியை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற திண்டுக்கல் டிராகன்ஸ்!ENG vs IND: "இந்தியா தவறியது அங்குதான்... 2-வது டெஸ்டில் அவரை இறக்குங்கள்" - கவாஸ்கர் அறிவுரை என்ன?ச... மேலும் பார்க்க