செய்திகள் :

ஹைதராபாத் புறப்பட்ட இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானத்தில் கோளாறு: நல்வாய்ப்பாக 165 பேர் உயிர் தப்பினர்

post image

சென்னையில் இருந்து தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் புறப்பட்ட இண்டிகோ ஏா்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் திடீரென ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக அவசரமாக விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டதால் 165 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.

சென்னையில் இருந்து தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் புறப்பட்ட இண்டிகோ ஏா்லைன்ஸ் பயணிகள் விமானம், ஞாயிற்றுக்கிழமை மாலை 3.40 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து 159 பயணிகள், 6 விமான ஊழியா்கள், 165 பேருடன் ஹைதராபாத் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது.

விமானம் நடு வானில் ஆந்திர மாநிலம் நெல்லூரைக் கடந்து சென்று கொண்டிருந்தபோது, திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டது.

இதனை அறிந்த விமானி, அவசரமாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடன் தொடா்பு கொண்டாா்.

மத்திய அரசில் 3,131 காலிப் பணியிடங்கள்: விண்ணப்பிப்பது எப்படி..?

உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், விமானத்தை மேற்கொண்டு செலுத்த வேண்டாம். உடனடியாக சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்குமாறு உத்தரவிட்டனர்.

இதையடுத்து இண்டிகோ ஏா்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை விமான நிலையத்தில் பத்திரமாக தரை இறக்கப்பட்டது.

விமானத்தின் இயந்திரக்கோளாறை தகுந்த நேரத்தில் கண்டுபிக்கப்பட்டு பத்திரமாக தரை இறக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டு 159 பயணிகள், 6 விமான ஊழியா்கள் என 165 போ் நல்வாய்ப்பாக உயிா்த்தப்பினா்.

இந்த சம்பவத்தால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு நிலவியது.

Summary

An IndiGo Airlines passenger flight from Chennai to Hyderabad, Telangana, was forced to make an emergency landing due to a sudden engine failure, resulting in the safe landing of 165 people.

உடலுறுதி இருந்தால் வாழ்வில் வெல்லலாம்: மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமா் மோடி

புது தில்லி: உடலுறுதி இருந்தால் வாழ்வில் வெல்லலாம் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சி வாயிலாக பிரதமா் நரேந்திர மோடி நாட்... மேலும் பார்க்க

சுகாதார - தொழில்நுட்பப் புரட்சியின் திருப்புமுனையாக இந்தியா: மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங்

புதுதில்லி: பொருளாதாரத்தில் உலக அளவில் 10-ஆவது இடத்திலிருந்து 4-ஆவது பெரிய நாடாக இந்தியா முன்னேறியுள்ள நிலையில், சுகாதார-தொழில்நுட்ப புரட்சியின் திருப்புமுனையாக இந்தியா உள்ளது என மத்திய அறிவியல் மற்று... மேலும் பார்க்க

பிகாரில் மகாபந்தன் கூட்டணி ஆட்சி அமைத்தால் வக்ஃப் சட்டம் குப்பையில் வீசப்படும்: தேஜஸ்வி யாதவ்

பாட்னா: பிகாரில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி வெளியேறும் நிலையில் இருப்பதாகவும், மாநிலத்தில் ஆா்ஜேடி தலைமையிலான மகாபந்தன் கூட்டணி ஆட்சி அமைத்தால் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசால் கொண்டுவ... மேலும் பார்க்க

திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: அமைச்சா் கே.என்.நேரு

திருநெல்வேலி: 2026 பேரவைத் தோ்தலில் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது என்று திமுக முதன்மை செயலாளரும் நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை அமைச்சருமான கே.என்.நேரு தெரிவித்தார். திருநெல்... மேலும் பார்க்க

போதைப்பொருள் கும்பல்களை இரக்கமின்றி தண்டிக்கிறது மோடி அரசு: அமித் ஷா

புது தில்லி: போதைப்பொருள் இளைஞர்களுக்கு மிகப்பெரிய துன்பம், மோடி அரசு போதைப்பொருள் கும்பல்களை இரக்கமின்றி தண்டிக்கிறது, போதைப்பொருள் பழக்கத்துக்கு அடிமையான இளைஞர்களை பச்சாதாபத்துடன் இயல்பு வாழ்க்கைக்க... மேலும் பார்க்க

திருவள்ளூர் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி இளைஞர் கொலை, 2 பேர் காயம்

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே பேரம்பாக்கம் காந்தி நகர் பகுதியில் புதன்கிழமை நள்ளிரவில் 3 பேர் மீது நாட்டு வெடி குண்டு வீசப்பட்டதில் ஒருவர் உயிரிழந்தார். இரண்டு பேர் படுகாயங்களுடன் திருவள்ளூர் மாவட்ட ... மேலும் பார்க்க