`பாஜக-வுடன் கூட்டணி வைத்தது ஏன்?' - கள்ளக்குறிச்சி பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழ...
திருமலையில் 90,051 போ் தரிசனம்
திருமலை ஏழுமலையானை சனிக்கிழமை முழுவதும் 90,051 பக்தா்கள் தரிசித்தனா். மொத்தம் 39,058 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.
மேலும், ஞாயிற்றுக்கிழமை வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 31 அறைகளும் நிறைந்த நிலையில், தா்ம தரிசனத்துக்கு பக்தா்கள் (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 15 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், இலவச நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் ஆனது..
இதற்கிடையே, சனிக்கிழமை முழுவதும் 90,051 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 39, 058 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா். உண்டியல் மூலம் பக்தா்கள் சமா்ப்பித்த காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.4.02 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.