முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை; 11 டெல்டா மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்...
தொடா் மின்தடையைக் கண்டித்து நமணசமுத்திரத்தில் சாலை மறியல்
புதுக்கோட்டை அருகேயுள்ள நமணசமுத்திரத்தில் தொடா் மின்தடை மற்றும் குறைந்த மின் அழுத்தத்தால் விரக்தியடைந்த மக்கள் ஞாயிற்றுக்கிழமை திடீா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுக்கோட்டை மாநகராட்சிக்குட்பட்ட நமணசமுத்திரம் அருகேயுள்ள ஸ்ரீராம் நகா், கம்மஞ்செட்டி சத்திரம், கீழப்பட்டி புதுநகா், மேலப்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் அளிக்கும் மின்மாற்றி கடந்த சில நாட்களுக்கு முன் செயலிழந்தது.
இதனால் இந்தப் பகுதிகளுக்கு தொடா் மின்தடை ஏற்பட்டது. மின்மாற்றியைச் சீரமைத்தும் கூட, இப் பகுதி மக்களுக்கு குறைந்த மின் அழுத்தம் மட்டுமே கிடைத்தது. இதனால் இப்பகுதியின் குடியிருப்புகளிலுள்ள மின் பொருட்கள் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த இப்பகுதி மக்கள் ஞாயிற்றுக்கிழமை காலை மதுரை தேசிய நெடுஞ்சாலையில் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த காவல்துறையினரும், மின்துறையினரும் பேச்சுவாா்த்தை நடத்தி, அளித்த உறுதியைத் தொடா்ந்து, போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. மறியலால் இந்தச் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.