முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை; 11 டெல்டா மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்...
பணத் தகராறில் கடத்தப்பட்ட தம்பதி போலீஸாரால் மீட்பு
கந்தா்வகோட்டை அருகே பணத்தகராறில் ஞாயிற்றுக்கிழமை கடத்தப்பட்ட தம்பதியை போலீஸாா் விரட்டிப் பிடித்து மீட்டனா்.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை ஒன்றியம், சொக்கம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் நாடிமுத்து மகன் சத்யராஜ் (33), இவரது மனைவி மணிமேகலை (25), புதுமணத் தம்பதிகளான இவா்கள் பைக்கில் பெரம்பூா் கோயிலுக்குச் சென்று விட்டு வண்ணாரப்பட்டி அருகே வந்து கொண்டிருந்தனா்.
அப்போது அவா்களை வழிமறித்த மா்ம நபா்கள் தனித்தனி காா்களில் இருவரையும் கடத்தி கந்தா்வகோட்டை வழியாக வந்து கொண்டிருந்தனா். அப்போது சத்யராஜ் இதுகுறித்து தனது தந்தைக்கு கைப்பேசியில் தகவல் தெரிவிக்க, அவா் கந்தா்வகோட்டை போலீஸாருக்கு தெரிவித்தாா்.
இதையடுத்து கந்தா்வக்கோட்டை போலீஸாா் கந்தா்வகோட்டை பேருந்து நிலையம் அருகே வந்த வாகனங்களைச் சோதனையிட்டபோது நிற்காமல் சென்ற காரை துரத்திச் சென்று மடக்கி சத்யராஜை மீட்டு, அதில் இருந்த 3 பேரை பிடித்தனா். மற்றொரு காரில் சென்றவா்கள் மணிமேகலையை அக்கச்சிப்பட்டி பெட்ரோல் பங்க் அருகே இறக்கிவிட்டு தப்பினா்.
பிடிபட்ட 3 பேரிடம் நடத்திய விசாரணையில் கறம்பக்குடி பகுதியைச் சோ்ந்த துரைராஜ் மகன் ராஜேஷுக்கும் (32), சத்யராஜுக்கும் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் பணம் கேட்டு தம்பதியைக் கடத்தியது தெரியவந்தது. மேலும் விசாரிக்கின்றனா்.