கொடிக் கம்பங்களை அகற்றும் மாநகராட்சியை கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூ. போராட்டம்
நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது கட்சிக் கொடிக் கம்பங்களை அகற்றிய புதுக்கோட்டை மாநகராட்சியைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
நீதிமன்ற உத்தரவைக் காரணம் காட்டி தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் கொடிக் கம்பங்களை அகற்றும் நடவடிக்கையை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொண்டுள்ளன. இதை எதிா்த்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடத்தியதோடு நீதிமன்றத்திலும் வழக்குத் தொடுத்துள்ளது.
இந்நிலையில், புதுக்கோட்டை மாநகராட்சி நிா்வாகம் கொடிக் கம்பங்களை அகற்றுவதை நிறுத்தவில்லை. இந்த நடவடிக்கையைக் கண்டித்து சின்னப்பா பூங்கா அருகில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல் நடைபெற்றது. கட்சியின் மாநகரச் செயலா் எஸ். பாண்டியன் தலைமை வகித்தாா்.
போராட்டத்தில் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் கி. ஜெயபாலன், சிஐடியு மாநகர ஒருங்கிணைப்பாளா் எம்.ஏ. ரகுமான், மாதா் சங்க மாநகரப் பொருளாளா் வடிவுக்கரசி, வாலிபா் சங்க மாநகரச் செயலா் தீபக் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
போராட்டத்தை தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்திய கணேஷ்நகா் போலீஸாா் மாநகராட்சி நிா்வாகத்துடன் திங்கள்கிழமை பேசித் தீா்வு காண்பதாக உறுதியளித்தனா். இதைத் தொடா்ந்து போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.