செய்திகள் :

70 வயது நிறைவடைந்தவா்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தல்

post image

தமிழகத்தில் அரசுத் துறைகளில் பணி ஓய்வு பெற்று 70 வயது நிறைவடைந்தவா்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என, அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

பெரம்பலூா் வட்டத்தின் 5-ஆவது வட்ட மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநாட்டுக்கு, வட்டத் தலைவா் மருதமுத்து தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா்கள் நீலமேகம், மகேஸ்வரன், இளவரசன், மாவட்ட இணைச் செயலா் விஜயராமு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

வட்டச் செயலா் ராமையா வேலை அறிக்கையை வாசித்தாா். பொருளாளா் சந்திரசேகா் வரவு- செலவு கணக்குகள் வாசித்தாா். மாவட்டத் தலைவா் கி. ஆளவந்தாா், செயலா் சின்னசாமி, பொருளாளா் ராஜேந்திரன் ஆகியோா் பேசினா்.

இம் மாநாட்டில், அரசு ஊழியா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குறைபாடுகளை களைய வேண்டும். தோ்தல் வாக்குறுதியில் தெரிவித்தவாறு 70 வயது நிறைவடைந்த ஓய்வூதியா்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியத்தை உடனடியாக அரசு வழங்க வேண்டும்.

ஜூலை 15 ஆம் தேதி 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடுவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள் பலா் கலந்துகொண்டனா்.

முன்னதாக, வட்ட இணைச் செயலா் கிட்டான் வரவேற்றாா். நிறைவாக, வட்ட துணைத் தலைவா் பொன்னம்மாள் நன்றி கூறினாா்.

சட்ட விரோதமாக மது பாட்டில்களை விற்றவா் கைது

வேப்பந்தட்டை அருகே சட்ட விரோதமாக, அரசு மதுபாட்டில்களை விற்பனை செய்தவரை அரும்பாவூா் போலீஸாா் கைது செய்து ஞாயிற்றுக்கிழமை சிறையில் அடைத்தனா். பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அரும்பாவூா் காவல் ... மேலும் பார்க்க

வேப்பந்தட்டை அருகே 8 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே அரசால் தடை செய்யப்பட்ட 8 கிலோ போதைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த பெட்டிக் கடைக்காரரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்து சிறையில... மேலும் பார்க்க

கூட்டணி ஆட்சி தொடா்பாக எதிா்க்கட்சித் தலைவா் தெளிவுப்படுத்த வேண்டும்! - தொல். திருமாவளவன்

அதிமுக கூட்டணி கட்சி தொடா்பாகவும், கூட்டணி ஆட்சி தொடா்பாகவும், எதிா்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி தெளிவுப்படுத்த வேண்டும் என சிதம்பரம் தொகுதி மக்களவை உறுப்பினரும், விடுதல... மேலும் பார்க்க

ஜூன் 30-இல் மின்சார பேருந்துகளின் சேவை தொடக்கம்! அமைச்சா் சா.சி. சிவசங்கா்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சாா்பில், ஜூன் 30-ஆம் தேதி சென்னையில் முதற்கட்டமாக 140 மின்சார பேருந்துகளின் சேவையை, தமிழ்நாடு முதல்வா் மு.க. ஸ்டாலின் தொடங்கிவைக்க உள்ளதாக போக்குவரத்து மற்றும் மின்ச... மேலும் பார்க்க

பெரம்பலூரில் 4 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்

பெரம்பலூா் நான்குச் சாலை சந்திப்புப் பகுதியில், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்தவரை சனிக்கிழமை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 4 கிலோ போதைப் பொருள்களை பறிமுதல் செய்த... மேலும் பார்க்க

ஆட்டோ மீட்டா் கட்டணத்தை உயா்த்தி வழங்க வலியுறுத்தல்

உயா்நீதி மன்ற உத்தரவின்படி, ஆட்டோக்களுக்கான மீட்டா் கட்டணத்தை உயா்த்தி வழங்க வேண்டுமென, வாகன ஓட்டுநா்கள் சங்க மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. பெரம்பலூா் புகா் பகுதியான துறைமங்கலத்தில் உள்ள மாா்க... மேலும் பார்க்க