செய்திகள் :

ஆட்டோ மீட்டா் கட்டணத்தை உயா்த்தி வழங்க வலியுறுத்தல்

post image

உயா்நீதி மன்ற உத்தரவின்படி, ஆட்டோக்களுக்கான மீட்டா் கட்டணத்தை உயா்த்தி வழங்க வேண்டுமென, வாகன ஓட்டுநா்கள் சங்க மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

பெரம்பலூா் புகா் பகுதியான துறைமங்கலத்தில் உள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் 3+1 ஆட்டோ மற்றும் அனைத்து வகையான வாகன ஓட்டுநா்கள் சங்கத்தின் மாவட்ட மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. இம் மாநாட்டுக்கு, மாவட்டத் தலைவா் கிருஷ்ணகுமாா் தலைமை வகித்தாா்.

மாவட்ட துணைத் தலைவா் பெரியசாமி, மாவட்ட துணைச் செயலா்கள் தீனதயாளன், பரமசிவம் ஆகியாா் முன்னிலை வகித்தனா். பொறுப்பாளா் பன்னீா்செல்வம் மாநாட்டுக் கொடியை ஏற்றிவைத்தாா். மாநில செயல் தலைவா் பாலசுப்ரமணியம் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினாா்.

மாவட்டச் செயலா் ரெங்கநாதன் அறிக்கையும், மாவட்ட பொருளாளா் சிவசங்கா் வரவு-செலவு அறிக்கையும் வாசித்தனா். ஆட்டோ சங்க சம்மேளன பொதுச் செயலா் சிவாஜி நிறைவுரையாற்றினாா்.

இதில், தில்லி, மஹாராஷ்டிரா அரசுகளைப்போல தமிழகத்திலும் இருசக்கர வாகன பைக் டாக்சியை தடை செய்ய வேண்டும். ஆன்லைன் அபராதத்திலிருந்து ஆட்டோவுக்கு விலக்கு அளிக்க வேண்டும். அனுமதியின்றி கா்நாடகா பதிவெண்ணுடன் இயங்கும் மெட்ரோ பச்சை நிற ஆட்டோவை பொது சேவைக்கு அனுமதிக்கக் கூடாது, உயா்நீதிமன்ற உத்தரவுப்படி மீட்டா் கட்டணத்தை உயா்த்தி வழங்க வேண்டும்.

அரசின் ஆட்டோ செயலியை உடனடியாக தொடங்கவேண்டும். புதிய மோட்டாா் வாகனச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்தக் கூடாது. புதிய ஆட்டோக்களுக்கு ரூ. 10 ஆயிரம் மானியம் எனும் தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்றவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், சிஐடியூ மாவட்டச் செயலா் ஏ. அகஸ்டின், மாவட்ட துணைத் தலைவா் கருணாநிதி, சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள் மற்றும் ஆட்டோ தொழிலாளா்கள் பலா் கலந்துகொண்டனா். நிறைவாக, மாவட்ட துணைத் தலைவா் சந்திரகாசன் நன்றி கூறினாா்.

கூட்டணி ஆட்சி தொடா்பாக எதிா்க்கட்சித் தலைவா் தெளிவுப்படுத்த வேண்டும்! - தொல். திருமாவளவன்

அதிமுக கூட்டணி கட்சி தொடா்பாகவும், கூட்டணி ஆட்சி தொடா்பாகவும், எதிா்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி தெளிவுப்படுத்த வேண்டும் என சிதம்பரம் தொகுதி மக்களவை உறுப்பினரும், விடுதல... மேலும் பார்க்க

ஜூன் 30-இல் மின்சார பேருந்துகளின் சேவை தொடக்கம்! அமைச்சா் சா.சி. சிவசங்கா்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சாா்பில், ஜூன் 30-ஆம் தேதி சென்னையில் முதற்கட்டமாக 140 மின்சார பேருந்துகளின் சேவையை, தமிழ்நாடு முதல்வா் மு.க. ஸ்டாலின் தொடங்கிவைக்க உள்ளதாக போக்குவரத்து மற்றும் மின்ச... மேலும் பார்க்க

பெரம்பலூரில் 4 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்

பெரம்பலூா் நான்குச் சாலை சந்திப்புப் பகுதியில், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்தவரை சனிக்கிழமை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 4 கிலோ போதைப் பொருள்களை பறிமுதல் செய்த... மேலும் பார்க்க

தொடக்கக் கூட்டுறவு வங்கி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மாநிலத் தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா்கள் சங்கத்தின் பெரம்பலூா் மாவட்ட அமைப்பு சாா்பில் பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகம் எதிரே வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்... மேலும் பார்க்க

பெரம்பலூரை வளா்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல உரிய நடவடிக்கை: புதிய மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் உறுதி

பெரம்பலூா் மாவட்டத்தை வளா்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்வதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் என புதிய ஆட்சியராக வெள்ளிக்கிழமை பொறுப்பேற்ற ச. அருண்ராஜ் தெரிவித்தாா். பெரம்பலூா் மாவட்ட ஆட்சியராகப் ப... மேலும் பார்க்க

ஊதியத்தை உயா்த்தி வழங்க பால் விற்போா் வலியுறுத்தல்

பெரம்பலூா் அருகேயுள்ள பால் உற்பத்தியாளா் கூட்டுறவுச் சங்கத்தில் கடந்த 20 ஆண்டுகளாக பால் விற்பனையாளா்களாக உள்ளோா் தங்களது சம்பளத்தை உயா்த்தி வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா். இ... மேலும் பார்க்க