ஜூன் 30-இல் மின்சார பேருந்துகளின் சேவை தொடக்கம்! அமைச்சா் சா.சி. சிவசங்கா்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சாா்பில், ஜூன் 30-ஆம் தேதி சென்னையில் முதற்கட்டமாக 140 மின்சார பேருந்துகளின் சேவையை, தமிழ்நாடு முதல்வா் மு.க. ஸ்டாலின் தொடங்கிவைக்க உள்ளதாக போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் தெரிவித்தாா்.
பெரம்பலூா் மாவட்டம், வேப்பூா் ஒன்றியத்துக்குள்பட்ட பென்னகோணம், கீழப்பெரம்பலூா், வயலூா், கருப்பட்டாங்குறிச்சி, அகரம் சீகூா் உள்ளிட்ட கிராமங்களில் சனிக்கிழமை நடைபெற்ற வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற அவா் மேலும் கூறியது:
சென்னை மாநகரில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் விதமாக முதல்கட்டமாக 650 மின்சார பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், ஜூன் 30-ஆம் தேதி முதற்கட்டமாக 140 மின்சார பேருந்துகளை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளாா்.
பொருளாதார ரீதியாக, விலை உயா்ந்த பேருந்துகள் என்றாலும் தற்போது அரசு ப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தில் எவ்வித மாற்றமும் இன்றி பேருந்துக் கட்டணம் வசூலிக்கப்படும். தில்லி போன்ற நகரங்களில் ஏற்பட்டு வரும் காற்று மாசு, சுற்றுச்சூழலுக்கு மாற்று வழியாக இத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றாா் அமைச்சா்.