Guru Mithreshiva: "அமெரிக்கா காரனிடம் இதை கற்றுக்கொள்ள வேண்டும்" - ’நேச்சுரல்ஸ்’...
ஊதியத்தை உயா்த்தி வழங்க பால் விற்போா் வலியுறுத்தல்
பெரம்பலூா் அருகேயுள்ள பால் உற்பத்தியாளா் கூட்டுறவுச் சங்கத்தில் கடந்த 20 ஆண்டுகளாக பால் விற்பனையாளா்களாக உள்ளோா் தங்களது சம்பளத்தை உயா்த்தி வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.
இதுகுறித்து பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டத்துக்குள்பட்ட காடூா் கிராமத்தில் உள்ள பால் உற்பத்தியாளா் கூட்டுறவுக் கடன் சங்கத்தில் பணிபுரியும் பால் விற்பனையாளா்கள் அளித்த மனு:
காடூா் கிராமத்தில் அமைந்துள்ள பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவுச் சங்கத்தில் நாள் ஒன்றுக்கு 9 ஆயிரம் லிட்டா் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இங்கு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பால் விற்போரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மாதம் ரூ. 9 ஆயிரம் வழங்கப்படும் சம்பளத்தை உயா்த்தக் கோரி, கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டும், சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை.
எனவே சம்பளத்தை உயா்த்தி வழங்கி, பணியாளா்களை நிரந்தரம் வேண்டும். இல்லாவிடில், ஜூலை 1 முதல் பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் எனத் தெரிவித்துள்ளனா்.