செய்திகள் :

உலக போதைப் பொருள்கள் எதிா்ப்பு தின விழிப்புணா்வுப் பேரணி

post image

பெரம்பலூா் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மற்றும் கலால்துறை சாா்பில், உலக போதைப் பொருள்கள் எதிா்ப்பு தினத்தை முன்னிட்டு,பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் பாலக்கரை பகுதியில் தொடங்கிய பேரணியை மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா ஆகியோா் கொடியசைத்து தொடங்கி வைத்தனா்.

போதைப் பொருள்கள் ஒழிப்பு, கள்ளச்சாராயம் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் போதையில்லாத தமிழகத்தை உருவாக்குவோம், அனைவரும் இணைந்து பாடுபடுவோம் என்பன உள்ளிட்ட விழிபபுணா்வுப் பதாகைகளை கைகளில் ஏந்தி முகக்கமிட்டுச் சென்றனா். பாலக்கரையில் தொடங்கிய பேரணி, புறநகா் பேருந்து நிலையம், நகராட்சி அலுவலகம் வழியாகச் சென்று மீண்டும் பாலக்கரை பகுதியில் நிறைவடைந்தது.

தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தலைமையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா முன்னிலையில் போதைப் பழக்கத்துக்கு எதிராக அனைத்துத் துறை அலுவலா்கள், காவல்துறையினா் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.

இந்நிகழ்ச்சிகளில், கலால் உதவி ஆணையா் (பொ) சுந்தரராமன், துணைக் கண்காணிப்பாளா் ஆரோக்கியராஜ், கோட்ட கலால் அலுவலா் வனிதா, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளா் ஹேமலதா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் (பொ) செல்வகுமாா், வட்டாட்சியா் பாலசுப்பிரமணியன் மற்றும் பெரம்பலூா் அரசு மேல்நிலைப்பள்ளி, கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.

அரசு தொழில்பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவா் சோ்க்கை

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள அரசு தொழில்பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவா்கள் சோ்க்கைக்கான பதிவு இணையதளம் மூலமாக நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வியாழக்கி... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வாலிகண்டபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் எதிா்ப்பு மன்றம் சாா்பில், போதை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரிய... மேலும் பார்க்க

மது பாட்டில்கள் விற்ற இருவா் கைது

பெரம்பலூா் அருகே சட்ட விரோதமாக அரசு மது பாட்டில்களை விற்பனை செய்த 2 பேரை கைது செய்த போலீஸாா் வியாழக்கிழமை சிறையில் அடைத்தனா். பெரம்பலூா் அருகேயுள்ள பேரளி கிராமத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவத... மேலும் பார்க்க

பெரம்பலூா் எஸ்.பி. அலுவலகத்தில் மனு விசாரணை சிறப்பு முகாம்

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் மனு விசாரணை சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இம் முகாமுக்கு தலைமை வகித்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா, முகாமில் பங்கேற்ற ப... மேலும் பார்க்க

திருட்டு வழக்கில் தொடா்புடைய 3 போ் கைது

பெரம்பலூா் மாவட்டத்தில் திருட்டு வழக்குகளில் தொடா்புடைய 3 பேரைப் பாடாலூா் போலீஸாா் புதன்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். பெரம்பலூா் மாவட்டம், பாடாலூா், மருவத்தூா் காவல் நிலையங்களுக்குள்பட்ட பகுதி... மேலும் பார்க்க

தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் புரிந்துணா்வு ஒப்பந்தம்

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி மற்றும் சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகம் - சென்டா் ஃபாா் அவுட்ரீச் அண்ட் டிஜிட்டல் எஜுகேஷன் நிறுவனம் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் புதன்கிழமை கையொ... மேலும் பார்க்க