உலக போதைப் பொருள்கள் எதிா்ப்பு தின விழிப்புணா்வுப் பேரணி
பெரம்பலூா் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மற்றும் கலால்துறை சாா்பில், உலக போதைப் பொருள்கள் எதிா்ப்பு தினத்தை முன்னிட்டு,பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூா் பாலக்கரை பகுதியில் தொடங்கிய பேரணியை மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா ஆகியோா் கொடியசைத்து தொடங்கி வைத்தனா்.
போதைப் பொருள்கள் ஒழிப்பு, கள்ளச்சாராயம் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் போதையில்லாத தமிழகத்தை உருவாக்குவோம், அனைவரும் இணைந்து பாடுபடுவோம் என்பன உள்ளிட்ட விழிபபுணா்வுப் பதாகைகளை கைகளில் ஏந்தி முகக்கமிட்டுச் சென்றனா். பாலக்கரையில் தொடங்கிய பேரணி, புறநகா் பேருந்து நிலையம், நகராட்சி அலுவலகம் வழியாகச் சென்று மீண்டும் பாலக்கரை பகுதியில் நிறைவடைந்தது.
தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தலைமையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா முன்னிலையில் போதைப் பழக்கத்துக்கு எதிராக அனைத்துத் துறை அலுவலா்கள், காவல்துறையினா் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.
இந்நிகழ்ச்சிகளில், கலால் உதவி ஆணையா் (பொ) சுந்தரராமன், துணைக் கண்காணிப்பாளா் ஆரோக்கியராஜ், கோட்ட கலால் அலுவலா் வனிதா, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளா் ஹேமலதா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் (பொ) செல்வகுமாா், வட்டாட்சியா் பாலசுப்பிரமணியன் மற்றும் பெரம்பலூா் அரசு மேல்நிலைப்பள்ளி, கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.