தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் புரிந்துணா்வு ஒப்பந்தம்
பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி மற்றும் சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகம் - சென்டா் ஃபாா் அவுட்ரீச் அண்ட் டிஜிட்டல் எஜுகேஷன் நிறுவனம் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் புதன்கிழமை கையொப்பமானது.
தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழக வளாகத்தில் நடைபெற்ற இந் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பல்கலைக் கழக வேந்தா் அ. சீனிவாசன் பேசினாா்.
நிகழ்ச்சியில், தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி முதல்வா் சண்முகசுந்தரம், புல முதல்வா் அன்பரசன், தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் செல்லப்பன், இன்டொ்னல் குவாலிட்டி அஸ்யுரென்ஸ் செல் ஒருங்கிணைப்பாளா் காா்த்திகா, ஒருங்கிணைப்பாளா்கள் கோவிந்தசாமி, பரமேஸ்வரி ஆகியோா் கலந்துகொண்டனா்.