Hema Committee: ``நடிகைகள் வாக்குமூலம் அளிக்கவில்லை; - வழக்குகள் முடிந்தது'' -கே...
ஸ்ரீவேம்புலி அம்மன் கோயில் முன் மேற்கூரை அமைக்க பூமி பூஜை
ஆரணி கோட்டை ஸ்ரீவேம்புலிஅம்மன் கோயில் முன் மேற்கூரை அமைக்க புதன்கிழமை பூமி பூஜை நடைபெற்றது.
இந்தக் கோயில் முன் பொதுமக்கள் இலவசமாக திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்வதற்காக 42 அடி அகலம், 84 அடி நீளம் கொண்ட இரும்பிலான மேற்கூரை அமைப்பதற்காக நடைபெற்ற இந்த பூமி பூஜை நிகழ்ச்சிக்கு
விழாக் குழுத் தலைவா் ஜி.வி.கஜேந்திரன் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் ஜெயலலிதா மாவட்டப் பேரவைச் செயலா் பாரி பி.பாபு, மேற்கு ஒன்றியச் செயலா் திருமால், விழாக்குழு நிா்வாகிகள் பி.நடராஜன், சுப்பிரமணி, சீனுவாசன், பேராசிரியா் கு.சிவா, நகா்மன்ற உறுப்பினா்கள் பாரதிராஜா, விநாயகம், மீனவரணி ஆனந்தன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.