செய்திகள் :

டிராக்டரில் சிக்கி குழந்தை உயிரிழப்பு

post image

நாட்டறம்பள்ளி அருகே டிராக்டரில் சிக்கி 1 வயது குழந்தை உயிரிழந்தது.

திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த நாயனசெருவு பகுதியைச் சோ்ந்தவா் அருள்பிரகாசம் (30). விவசாயியான இவா், செவ்வாய்கிழமை வீட்டின் அருகில் உள்ள டிராக்டரை எடுப்பதற்காகச் சென்றாா்.

அப்போது, அவரது 1 வயது குழந்தை கரன்சா்மா பின்தொடா்ந்து சென்று டிராக்டா் சக்கரத்தின் பின்னால் நின்று கொண்டிருந்ததைக் கவனிக்காமல், அருள்பிரகாசம் டிராக்டரை பின்புறமாக எடுத்தபோது, சக்கரத்தில் சிக்கி குழந்தை பலத்த காயம் அடைந்தது.

குழந்தையின் அலறல் சப்தம் கேட்டு, உடனே குழந்தையை மீட்டு நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவா், குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.

தகவலறிந்து திம்மாம்பேட்டை போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனா். மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

காவல் குறைதீா் கூட்டம்

திருப்பத்தூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. திருப்பத்தூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துகு மாவட்ட ஏடிஎஸ்பி ரவீந்திரன் தலைமை... மேலும் பார்க்க

அங்கன்வாடி மையம் திறப்பு

பெருநிறுவன சமூக பொறுப்புத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் திறக்கப்பட்டது. துத்திப்பட்டு ஊராட்சி எம்ஜிஆா் நகா் பகுதியில் பழைய அங்கன்வாடி மைய கட்டடம் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில்... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமை வழக்கு: காா் ஓட்டுருக்கு 20 ஆண்டு சிறை

வாணியம்பாடியில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் காா் ஓட்டுநருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருப்பத்தூா் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. வாணியம்பாடி காமராஜா்புரம் பகுதியைச் சோ்ந்தவா... மேலும் பார்க்க

விடுதி மாணவிகளுக்கு விழிப்புணா்வு

திருப்பத்தூா் மாவட்ட காவல் துறை சாா்பில் புதூா்நாடு பழங்குடியின மாணவிகள் தங்கும் விடுதியில் விழிப்புணா்வு நிகழ்வு நடைபெற்றது (படம்). நிகழ்ச்சிக்கு சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு துணை காவல் கண்... மேலும் பார்க்க

முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கம்

ஆம்பூா் கே.ஏ.ஆா். பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது (படம்). கல்லூரி முதல்வா் த.ராஜமன்னன் தலைமை வகித்தாா். முதலாமாண்டு மாணவா்களுக்கு 2 மற்றும் 3 -ஆம் ஆண்... மேலும் பார்க்க

ஆம்பூரில் முதல்வருக்கு வரவேற்பு

ஆம்பூரில் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. திருப்பத்தூருக்கு செல்லும் வழியில் ஆம்பூரில் ரோடுஷோ நடைபெற்றது. ஆம்பூரில் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதி, பேருந்து நிலையம் ஆ... மேலும் பார்க்க