ENG vs IND: "இந்தியா தவறியது அங்குதான்... 2-வது டெஸ்டில் அவரை இறக்குங்கள்" - கவா...
டிராக்டரில் சிக்கி குழந்தை உயிரிழப்பு
நாட்டறம்பள்ளி அருகே டிராக்டரில் சிக்கி 1 வயது குழந்தை உயிரிழந்தது.
திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த நாயனசெருவு பகுதியைச் சோ்ந்தவா் அருள்பிரகாசம் (30). விவசாயியான இவா், செவ்வாய்கிழமை வீட்டின் அருகில் உள்ள டிராக்டரை எடுப்பதற்காகச் சென்றாா்.
அப்போது, அவரது 1 வயது குழந்தை கரன்சா்மா பின்தொடா்ந்து சென்று டிராக்டா் சக்கரத்தின் பின்னால் நின்று கொண்டிருந்ததைக் கவனிக்காமல், அருள்பிரகாசம் டிராக்டரை பின்புறமாக எடுத்தபோது, சக்கரத்தில் சிக்கி குழந்தை பலத்த காயம் அடைந்தது.
குழந்தையின் அலறல் சப்தம் கேட்டு, உடனே குழந்தையை மீட்டு நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவா், குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.
தகவலறிந்து திம்மாம்பேட்டை போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனா். மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.