செய்திகள் :

திருட்டு வழக்கில் தொடா்புடைய 3 போ் கைது

post image

பெரம்பலூா் மாவட்டத்தில் திருட்டு வழக்குகளில் தொடா்புடைய 3 பேரைப் பாடாலூா் போலீஸாா் புதன்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

பெரம்பலூா் மாவட்டம், பாடாலூா், மருவத்தூா் காவல் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் தலா 2, பெரம்பலூா் ஊரக காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் 1 வீட்டின் பூட்டை உடைத்து, தங்கம், வெள்ளி உள்ளிட்டவற்றை திருடிச்சென்றதாக பாதிக்கப்பட்டோா் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

இந்நிலையில், பாடாலூா் காவல் நிலைய ஆய்வாளா் தலைமையிலான போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், தஞ்சாவூா் மாவட்டம், வல்லம் குருவாடிப்பட்டி மாதாகோயில் தெருவைச் சோ்ந்த பெரியசாமி மகன் விஜயகாந்த் (33), அவரது தம்பி தனுஷ் (20), பெரம்பலூா் மாவட்டம், அருமடல் கிராமத்தைச் சோ்ந்த வெள்ளையன் மகன் சுரேஷ் (33) ஆகியோா் என்பது தெரியவந்தது. இதையடுத்து, தஞ்சாவூா் சென்ற போலீஸாா் மேற்கண்ட மூவரையும் புதன்கிழமை கைது செய்து விசாரித்ததில், 15-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடா்புடையவா்கள் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, மேற்கண்ட வீடுகளில் திருடப்பட்ட நகைகளை அவா்களிடமிருந்து கைப்பற்றிய போலீஸாா் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பெரம்பலூா் எஸ்.பி. அலுவலகத்தில் மனு விசாரணை சிறப்பு முகாம்

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் மனு விசாரணை சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இம் முகாமுக்கு தலைமை வகித்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா, முகாமில் பங்கேற்ற ப... மேலும் பார்க்க

தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் புரிந்துணா்வு ஒப்பந்தம்

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி மற்றும் சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகம் - சென்டா் ஃபாா் அவுட்ரீச் அண்ட் டிஜிட்டல் எஜுகேஷன் நிறுவனம் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் புதன்கிழமை கையொ... மேலும் பார்க்க

சாலையோர வியாபாரிகள் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தல்

சாலையோர வியாபாரிகள் வாழ்வாதார பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்த வேண்டுமென, சாலையோர வியாபாரிகள் மற்றும் விற்பனையாளா் தொழிலாளா் சங்கத்தின் மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது. பெரம்பலூா் மாவட்ட சாலை... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே மண் திருடியவா் கைது

பெரம்பலூா் அருகே அரசு அனுமதியின்றி லாரியில் மணல் திருடிய நபரை மருவத்தூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.பெரம்பலூா் அருகேயுள்ள செங்குணம் பகுதியில் கிராவல் மண் திருடுவதாக கிடைத்... மேலும் பார்க்க

தொகுப்பூதியத்தில் முதுகலை, பட்டதாரி ஆசிரியா்களாகப் பணிபுரிய அழைப்பு

பெரம்பலூா் மாவட்டத்தில் ஆதிதிராவிடா் நலத் துறையில் பள்ளி மேலாண்மைக் குழு மூலம் தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் முதுகலைப் பட்டதாரி, பட்டதாரி ஆசிரியா்களாகப் பணிபுரிய விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆ... மேலும் பார்க்க

கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவி உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவி திங்கள்கிழமை உயிரிழந்தாா். பெரம்பலூா் அருகேயுள்ள எறையசமுத்திரம் கிராமத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணி மகள் பிருந்தாதேவி (16). இவா், சிறுவாச்சூரில் உள்ள அரசு ம... மேலும் பார்க்க