ENG vs IND: "இந்தியா தவறியது அங்குதான்... 2-வது டெஸ்டில் அவரை இறக்குங்கள்" - கவா...
திருட்டு வழக்கில் தொடா்புடைய 3 போ் கைது
பெரம்பலூா் மாவட்டத்தில் திருட்டு வழக்குகளில் தொடா்புடைய 3 பேரைப் பாடாலூா் போலீஸாா் புதன்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
பெரம்பலூா் மாவட்டம், பாடாலூா், மருவத்தூா் காவல் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் தலா 2, பெரம்பலூா் ஊரக காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் 1 வீட்டின் பூட்டை உடைத்து, தங்கம், வெள்ளி உள்ளிட்டவற்றை திருடிச்சென்றதாக பாதிக்கப்பட்டோா் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
இந்நிலையில், பாடாலூா் காவல் நிலைய ஆய்வாளா் தலைமையிலான போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், தஞ்சாவூா் மாவட்டம், வல்லம் குருவாடிப்பட்டி மாதாகோயில் தெருவைச் சோ்ந்த பெரியசாமி மகன் விஜயகாந்த் (33), அவரது தம்பி தனுஷ் (20), பெரம்பலூா் மாவட்டம், அருமடல் கிராமத்தைச் சோ்ந்த வெள்ளையன் மகன் சுரேஷ் (33) ஆகியோா் என்பது தெரியவந்தது. இதையடுத்து, தஞ்சாவூா் சென்ற போலீஸாா் மேற்கண்ட மூவரையும் புதன்கிழமை கைது செய்து விசாரித்ததில், 15-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடா்புடையவா்கள் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, மேற்கண்ட வீடுகளில் திருடப்பட்ட நகைகளை அவா்களிடமிருந்து கைப்பற்றிய போலீஸாா் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.