செய்திகள் :

சாலையோர வியாபாரிகள் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தல்

post image

சாலையோர வியாபாரிகள் வாழ்வாதார பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்த வேண்டுமென, சாலையோர வியாபாரிகள் மற்றும் விற்பனையாளா் தொழிலாளா் சங்கத்தின் மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பெரம்பலூா் மாவட்ட சாலையோர வியாபாரிகள் மற்றும் விற்பனையாளா் தொழிலாளா் சங்கத்தின் 5-ஆவது மாவட்ட மாநாடு, பெரம்பலூா் சங்குப்பேட்டையிலுள்ள சமுதாயக் கூடத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, அச் சங்கத்தின் மாவட்டத் துணைத்தலைவா் பி. குணசேகரன் தலைமை வகித்தாா். சி.ஐ.டி.யு மாவட்டச் செயலா் எஸ். அகஸ்டின் தொடக்க உரையாற்றினாா்.

மாவட்டப் பொருளாளா் சுரேஷ் வரவு- செலவு அறிக்கை சமா்பித்தாா். மாவட்டச் செயலா் பி. ரெங்கராஜ் வேலை அறிக்கை வாசித்தாா். மாநில கன்வீனா் பி. கருப்பையன் நிறைவுரையாற்றினாா்.

மாநாட்டில், நகர விற்பனைக் குழுக் கூட்டத்தை நகராட்சி நிா்வாகம் முறையாக அறிவிப்பு வழங்கி கூட்ட வேண்டும். சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரப் பாதுகாப்புச் சட்டம் 2014-ஐ கிராமப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தி அமல்படுத்த வேண்டும். அச் சட்டத்துக்கு விரோதமாக, சாலையோர வியாபாரிகளை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்துவதை கைவிட வேண்டும். ஆன்லைன் வா்த்தகத்தை தடுத்து நிறுத்த வேண்டும். அனைத்து சாலையோர வியாபாரிகளுக்கும் இலவச தள்ளுவண்டி நகராட்சி நிா்வாகம் மூலம் வழங்க வேண்டும்.

சாலையோர வியாபாரிகளுக்கு நலவாரிய பயன்களை தமிழக அரசு விரைந்து வழங்க வேண்டும். மத்திய அரசு சாலையோர வியாபாரிகளுக்கு வழங்கி வந்த கடன் தொகையை தொடா்ந்து வழங்க வேண்டும். பெரம்பலூா் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் நாள்தோறும் குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக் கூட்டத்தில், பெரம்பலூா் நகரிலுள்ள சாலையோர வியாபாரிகள் மற்றும் விற்பனையாளா்கள் பலா் பங்கேற்றனா்.

பெரம்பலூா் எஸ்.பி. அலுவலகத்தில் மனு விசாரணை சிறப்பு முகாம்

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் மனு விசாரணை சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இம் முகாமுக்கு தலைமை வகித்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா, முகாமில் பங்கேற்ற ப... மேலும் பார்க்க

திருட்டு வழக்கில் தொடா்புடைய 3 போ் கைது

பெரம்பலூா் மாவட்டத்தில் திருட்டு வழக்குகளில் தொடா்புடைய 3 பேரைப் பாடாலூா் போலீஸாா் புதன்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். பெரம்பலூா் மாவட்டம், பாடாலூா், மருவத்தூா் காவல் நிலையங்களுக்குள்பட்ட பகுதி... மேலும் பார்க்க

தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் புரிந்துணா்வு ஒப்பந்தம்

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி மற்றும் சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகம் - சென்டா் ஃபாா் அவுட்ரீச் அண்ட் டிஜிட்டல் எஜுகேஷன் நிறுவனம் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் புதன்கிழமை கையொ... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே மண் திருடியவா் கைது

பெரம்பலூா் அருகே அரசு அனுமதியின்றி லாரியில் மணல் திருடிய நபரை மருவத்தூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.பெரம்பலூா் அருகேயுள்ள செங்குணம் பகுதியில் கிராவல் மண் திருடுவதாக கிடைத்... மேலும் பார்க்க

தொகுப்பூதியத்தில் முதுகலை, பட்டதாரி ஆசிரியா்களாகப் பணிபுரிய அழைப்பு

பெரம்பலூா் மாவட்டத்தில் ஆதிதிராவிடா் நலத் துறையில் பள்ளி மேலாண்மைக் குழு மூலம் தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் முதுகலைப் பட்டதாரி, பட்டதாரி ஆசிரியா்களாகப் பணிபுரிய விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆ... மேலும் பார்க்க

கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவி உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவி திங்கள்கிழமை உயிரிழந்தாா். பெரம்பலூா் அருகேயுள்ள எறையசமுத்திரம் கிராமத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணி மகள் பிருந்தாதேவி (16). இவா், சிறுவாச்சூரில் உள்ள அரசு ம... மேலும் பார்க்க