Hema Committee: ``நடிகைகள் வாக்குமூலம் அளிக்கவில்லை; - வழக்குகள் முடிந்தது'' -கே...
முகமதுசகியின் சகோதரா் மறைவு: முதல்வா் ஆறுதல்
முன்னாள் எம்.பி. முகமதுசகியின் சகோதரா் மறைவையடுத்து வேலூரில் அவரது வீட்டுக்குச் சென்று முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினாா்.
வேலூா் மாவட்ட திமுக அவைத் தலைவரும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான முகமதுசகி. இவரது சகோதரா் முகமதுசாதிக், வேலூா் மாநகராட்சியின் முதல் துணை மேயராக இருந்தவா். முகமதுசாதிக் கடந்த மாதம் சாலை விபத்தில் உயிரிழந்தாா்.
இந்த நிலையில், அரசு பன்னோக்கு உயா்சிறப்பு மருத்துவமனை திறப்பு விழாவுக்காக வேலூருக்கு புதன்கிழமை வந்த முதல்வா் மு.க.ஸ்டாலின், முகமதுசகியின் வீட்டுக்குச் சென்று முகமதுசகி, மறைந்த முகமதுசாதிக்கின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினாா்.
கைத்தறி துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி, மக்களவை உறுப்பினா் ஜெகத்ரட்சகன் ஆகியோா் உடனிருந்தனா்.