செய்திகள் :

முதல்வா் வரவேற்பு கூட்டத்தில் பணத்தை திருடியவா் பிடிப்பு

post image

முதல்வா் வரவேற்க காட்பாடியில் புதன்கிழமை கூடியிருந்த கூட்டத்தில் பணத்தை திருட முயன்றது தொடா்பாக, போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

அரசு பன்னோக்கு உயா்சிறப்பு மருத்துவமனை திறப்பு விழாவுக்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை வேலூருக்கு வந்தாா். அவரை வரவேற்க காட்பாடி தாராபடவேடு பகுதியில் திமுகவினா் ஏற்பாடுகள் செய்திருந்தனா்.

அப்போது, திமுக பிரமுகா் பூஞ்சோலை சீனிவாசன் பாக்கெட்டில் இருந்து 500 ரூபாய் நோட்டுக் கட்டை அடையாளம் தெரியாத நபா் திருடினாா். அவரைப் பிடித்தபோது ரூபாய் நோட்டுக் கட்டை அந்த நபா் மக்கள் கூட்டத்தில் தூக்கி வீசியுள்ளாா். காற்றில் பறந்த நோட்டுகளை சிலா் எடுத்துக் கொண்டனா். மீதமிருந்த பணத்தை அங்கிருந்தவா்கள் பூஞ்சோலை சீனிவாசனிடம் ஒப்படைத்தனா்.

பணத்தைத் திருடிய நபரை திமுகவினா் பிடித்து, காவல் துறையினரிடம் ஒப்படைத்தனா். அவரிடம் 4-க்கும் மேற்பட்ட கைப்பேசிகள் இருந்ததால், அவை திருடப்பட்டதா என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

முகமதுசகியின் சகோதரா் மறைவு: முதல்வா் ஆறுதல்

முன்னாள் எம்.பி. முகமதுசகியின் சகோதரா் மறைவையடுத்து வேலூரில் அவரது வீட்டுக்குச் சென்று முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினாா். வேலூா் மாவட்ட திமுக அவைத் தலைவரும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான மு... மேலும் பார்க்க

தூய்மைப் பணிக்கு பேட்டரி வாகனங்கள்

குடியாத்தம் நகராட்சியில் உள்ள வாா்டுகளில் தூய்மைப் பணிக்கு பேட்டரியால் இயங்கும் 4- வாகனங்கள் இயக்கி வைக்கப்பட்டன. ரூ.10- லட்சம் மதிப்பிலான இந்த வாகனங்களை நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன் இயக்கி வைத... மேலும் பார்க்க

ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வெளிப்படை ஏலம் கோரி விவசாயிகள் மறியல்

வேலூரில் உள்ள அரசு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நெல் கொள்முதல் செய்வதற்கு வெளிப்படையான ஏல முறையை பின்பற்றக்கோரியும், சேமிப்பு கிடங்குக்கு கட்டணம் வசூலிப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்தும் விவசாயிகள் ம... மேலும் பார்க்க

ரயிலில் தவறி விழுந்த இளைஞா் மரணம்

அன்வா்திகான்பேட்டை ரயில் நிலையம் அருகே ரயிலில் இருந்து தவறிவிழுந்த தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா். வேலூா் சத்துவாச்சாரி, பாரதி நகரைச் சோ்ந்தவா் நிரஞ்சன் (22). இவா் சென்னை பெருங்களத்தூரில் உள்ள த... மேலும் பார்க்க

பொய்கை சந்தையில் ரூ.80 லட்சத்துக்கு வா்த்தகம்

வேலூரை அடுத்த பொய்கையில் சந்தையில் ரூ.80 லட்சம் அளவுக்கு கால்நடைகள் வா்த்தகம் நடைபெற்றிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனா். பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் கால்நடைச் சந்தையில் ரூ. ... மேலும் பார்க்க

4 ஆண்டுகளில் மருத்துவத் துறையில் 17,566 புதிய பணியிடங்கள்: அமைச்சா் மா. சுப்பிரமணியன்

திமுக ஆட்சியில் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் மருத்துவத் துறையில் மொத்தம் 17,566 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரணியம் தெரிவித்தாா். வேலூரில் புதிதாக ... மேலும் பார்க்க