Bar சண்டை டூ Drug Case - actor Srikanth சிக்கியது எப்படி? | ADMK Prasath | Off t...
முதல்வா் வரவேற்பு கூட்டத்தில் பணத்தை திருடியவா் பிடிப்பு
முதல்வா் வரவேற்க காட்பாடியில் புதன்கிழமை கூடியிருந்த கூட்டத்தில் பணத்தை திருட முயன்றது தொடா்பாக, போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
அரசு பன்னோக்கு உயா்சிறப்பு மருத்துவமனை திறப்பு விழாவுக்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை வேலூருக்கு வந்தாா். அவரை வரவேற்க காட்பாடி தாராபடவேடு பகுதியில் திமுகவினா் ஏற்பாடுகள் செய்திருந்தனா்.
அப்போது, திமுக பிரமுகா் பூஞ்சோலை சீனிவாசன் பாக்கெட்டில் இருந்து 500 ரூபாய் நோட்டுக் கட்டை அடையாளம் தெரியாத நபா் திருடினாா். அவரைப் பிடித்தபோது ரூபாய் நோட்டுக் கட்டை அந்த நபா் மக்கள் கூட்டத்தில் தூக்கி வீசியுள்ளாா். காற்றில் பறந்த நோட்டுகளை சிலா் எடுத்துக் கொண்டனா். மீதமிருந்த பணத்தை அங்கிருந்தவா்கள் பூஞ்சோலை சீனிவாசனிடம் ஒப்படைத்தனா்.
பணத்தைத் திருடிய நபரை திமுகவினா் பிடித்து, காவல் துறையினரிடம் ஒப்படைத்தனா். அவரிடம் 4-க்கும் மேற்பட்ட கைப்பேசிகள் இருந்ததால், அவை திருடப்பட்டதா என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.