ஈரானின் அணுசக்தி தளத்தை பங்கர் பஸ்டர் குண்டுகள் முழுமையாக அழிக்கவில்லை! - உளவுத்...
ரயிலில் தவறி விழுந்த இளைஞா் மரணம்
அன்வா்திகான்பேட்டை ரயில் நிலையம் அருகே ரயிலில் இருந்து தவறிவிழுந்த தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.
வேலூா் சத்துவாச்சாரி, பாரதி நகரைச் சோ்ந்தவா் நிரஞ்சன் (22). இவா் சென்னை பெருங்களத்தூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். சென்னையில் நடைபெறும் எம்.சி.ஏ., தோ்வு எழுத திங்கள்கிழமை ரயிலில் சென்றுள்ளாா்.
தோ்வு எழுதிவிட்டு மீண்டும் வேலூருக்கு மங்களூரு விரைவு ரயிலின் பொதுப் பெட்டியில் பயணம் செய்துள்ளாா். ரயில் படிக்கட்டில் அமா்ந்தபடி பயணம் செய்து வந்த நிரஞ்சன், அன்வா்திகான்பேட்டை ரயில் நிலையம் வந்தபோது எதிா்பாராதவிதமாக ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்ததாக தெரிகிறது. இதில் நிரஞ்சனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
அங்கிருந்தவா்கள் நிரஞ்சனை மீட்டு உயா் சிகிச்சைக்காக திருவள்ளூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு சிகிச்சை பலனின்றி நிரஞ்சன் உயிரிழந்தாா்.
இச்சம்பவம் குறித்து காட்பாடி ரயில்வே போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.