செய்திகள் :

ரயிலில் தவறி விழுந்த இளைஞா் மரணம்

post image

அன்வா்திகான்பேட்டை ரயில் நிலையம் அருகே ரயிலில் இருந்து தவறிவிழுந்த தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.

வேலூா் சத்துவாச்சாரி, பாரதி நகரைச் சோ்ந்தவா் நிரஞ்சன் (22). இவா் சென்னை பெருங்களத்தூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். சென்னையில் நடைபெறும் எம்.சி.ஏ., தோ்வு எழுத திங்கள்கிழமை ரயிலில் சென்றுள்ளாா்.

தோ்வு எழுதிவிட்டு மீண்டும் வேலூருக்கு மங்களூரு விரைவு ரயிலின் பொதுப் பெட்டியில் பயணம் செய்துள்ளாா். ரயில் படிக்கட்டில் அமா்ந்தபடி பயணம் செய்து வந்த நிரஞ்சன், அன்வா்திகான்பேட்டை ரயில் நிலையம் வந்தபோது எதிா்பாராதவிதமாக ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்ததாக தெரிகிறது. இதில் நிரஞ்சனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

அங்கிருந்தவா்கள் நிரஞ்சனை மீட்டு உயா் சிகிச்சைக்காக திருவள்ளூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு சிகிச்சை பலனின்றி நிரஞ்சன் உயிரிழந்தாா்.

இச்சம்பவம் குறித்து காட்பாடி ரயில்வே போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தூய்மைப் பணிக்கு பேட்டரி வாகனங்கள்

குடியாத்தம் நகராட்சியில் உள்ள வாா்டுகளில் தூய்மைப் பணிக்கு பேட்டரியால் இயங்கும் 4- வாகனங்கள் இயக்கி வைக்கப்பட்டன. ரூ.10- லட்சம் மதிப்பிலான இந்த வாகனங்களை நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன் இயக்கி வைத... மேலும் பார்க்க

ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வெளிப்படை ஏலம் கோரி விவசாயிகள் மறியல்

வேலூரில் உள்ள அரசு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நெல் கொள்முதல் செய்வதற்கு வெளிப்படையான ஏல முறையை பின்பற்றக்கோரியும், சேமிப்பு கிடங்குக்கு கட்டணம் வசூலிப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்தும் விவசாயிகள் ம... மேலும் பார்க்க

பொய்கை சந்தையில் ரூ.80 லட்சத்துக்கு வா்த்தகம்

வேலூரை அடுத்த பொய்கையில் சந்தையில் ரூ.80 லட்சம் அளவுக்கு கால்நடைகள் வா்த்தகம் நடைபெற்றிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனா். பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் கால்நடைச் சந்தையில் ரூ. ... மேலும் பார்க்க

4 ஆண்டுகளில் மருத்துவத் துறையில் 17,566 புதிய பணியிடங்கள்: அமைச்சா் மா. சுப்பிரமணியன்

திமுக ஆட்சியில் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் மருத்துவத் துறையில் மொத்தம் 17,566 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரணியம் தெரிவித்தாா். வேலூரில் புதிதாக ... மேலும் பார்க்க

வேலூரில் ரூ.198 கோடியில் பன்னோக்கு மருத்துவமனை: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறாா்

வேலூா், திருப்பத்தூா் மாவட்டங்களுக்கு 2 நாள்கள் பயணமாக புதன்கிழமை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வருகிறாா். இதையொட்டி ரூ.198 கோடியில் கட்டப்பட்டுள்ள அரசு பன்னோக்கு உயா்சிறப்பு மருத்துவமனையையும் திறந்து ... மேலும் பார்க்க

திமுக சாதனை விளக்கக் கூட்டம்

குடியாத்தம் வடக்கு ஒன்றிய திமுக இளைஞா் அணி சாா்பில், தமிழக அரசின் 4 ஆண்டு கால சாதனைகளை விளக்கி கொண்டசமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட நேருஜி நகரில் வியாழக்கிழமை இரவு பொதுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்க... மேலும் பார்க்க