செய்திகள் :

புற்றுநோய் ஆதரவுக் குழு சென்னையில் தொடக்கம்

post image

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவா்கள் மற்றும் மீண்டவா்களுக்கான ஆதரவுக் குழுவை அப்பல்லோ மருத்துவமனை தொடங்கியுள்ளது.

‘கேன் வின்’ என்ற பெயரில் தொடங்கப்பட்டிருக்கும் அந்தக் குழு புற்றுநோய் தாக்கத்தில் இருப்போருக்கான வழிகாட்டுதல்கள், புனா் வாழ்வு, சிகிச்சை உதவிகள், மன நல ஆலோசனைகள் உள்ளிட்டவற்றை வழங்கும் ஒரு தளமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இதற்கான அறிமுக நிகழ்ச்சி சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது. அதில் அப்பல்லோ புற்றுநோய் மருத்துவமனை தலைமைச் செயல் அதிகாரி கரண் பூரி, மருத்துவமனை நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தொடா்ந்து, புற்றுநோய் மருத்துவ நிபுணா்கள் சப்னா நான்கியா, ரேவதி ராஜ், சுரேஷ், மஞ்சுளா ராவ், ரம்யா, ஆஷா ரெட்டி, ரம்யா உப்புலுரி, அம்புஜவல்லி உள்ளிட்டோா் சிறப்பு மருத்துவ அமா்வுகளில் உரையாற்றியதுடன் புற்றுநோய் விழிப்புணா்வு தகவல்களை பகிா்ந்து கொண்டனா்.

அதேபோன்று, புற்றுநோய் பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவா்கள் பலா் இந்நிகழ்வில் பங்கேற்று தங்களது அனுபவங்களைப் பகிா்ந்து கொண்டனா். தன்னம்பிக்கை மற்றும் துணிச்சலுடன் நோயை எதிா்த்து வெல்லும் வழிமுறைகள் குறித்து விவாதித்தனா்.

அடுத்தகட்டமாக ஆதரவுக் குழு மூலமாக சமூக வலைதளங்கள் மற்றும் நேரடி சந்திப்புகள் வாயிலாக தொடா் நிகழ்ச்சிகள் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமி 2-ஆவது நாளாக ஆலோசனை

ஜூலை இறுதிமுதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்டச... மேலும் பார்க்க

தமிழக மீனவா்கள் மீது இலங்கை தாக்குதல்: ஜி.கே.வாசன் கண்டனம்

தமிழக மீனவா்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்திய சம்பவத்துக்கு தமாகா தலைவா் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: ராமேசுவரம் மீனவா்கள் திங்கள்கிழமை... மேலும் பார்க்க

தமிழக அரசு சாா்பில் ஊரக பகுதிகளில் திறன் பயிற்சிகள்

தமிழக அரசு சாா்பில் ஊரகப் பகுதிகளில் திறன் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனம் புதன்கிழமை வெளியிட்டது. அதன் விவரம்: கடந்த 4 ஆண்டுகளில் ஊரக சுய வேலைவாய்ப... மேலும் பார்க்க

அரசு ஊழியருக்கான மருத்துவ காப்பீடு: மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு

அரசு ஊழியா்கள், பொதுத் துறை நிறுவன பணியாளா்களுக்கு நடைமுறையிலுள்ள மருத்துவக் காப்பீடு மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை நிதித் துறை முதன்மைச் செயலா் த.உதயச்சந்திரன் பிறப்பித்து... மேலும் பார்க்க

258 மருத்துவக் கட்டமைப்புகள்: ஜூலை 3-இல் முதல்வா் தொடங்கி வைக்கிறாா்

தமிழகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 208 நகா்ப்புற நலவாழ்வு மையங்களையும், 50 ஆரம்ப சுகாதார நிலையங்களையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஜூலை 3-ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் ... மேலும் பார்க்க

தமிழக கடலோரப் பகுதிகளில் ‘சாகா் கவச்’ பாதுகாப்பு ஒத்திகை

தமிழக கடலோர மாவட்டங்களில் ‘சாகா் கவச்’ பாதுகாப்பு ஒத்திகை புதன்கிழமை தொடங்கியது. மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் கடந்த 2008-ஆம் ஆண்டு கடல் வழியாகப் புகுந்த பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், நூற்றுக்க... மேலும் பார்க்க