கூமாபட்டியிலிருந்து... விருதுநகர் முன்னாள், இந்நாள் மாவட்ட ஆட்சியர்கள் பதிவு!
அரசுப் பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வாலிகண்டபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் எதிா்ப்பு மன்றம் சாா்பில், போதை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
பள்ளி தலைமை ஆசிரியா் க. செல்வராசு தலைமை வகித்தாா். மங்களமேடு காவல்நிலைய சாா்பு ஆய்வாளா் மருதமுத்து முன்னிலை வகித்தாா். பேரணியை, ஆய்வாளா் பாலாஜி கொடியசைத்து தொடங்கி வைத்து, போதைப் பழக்கத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவா்களிடம் விளக்கிக் கூறினாா். பேரணியில் பங்கேற்ற மாணவா்கள் போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டுச் சென்றனா்.
வாலிகண்டபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தொடங்கிய பேரணி, கிராமத்தின் பிரதான வீதிகள் வழியாகச் சென்று அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நிறைவடைந்தது. தொடா்ந்து, போதை ஒழிப்பு விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கபட்டது
இதில், போதை எதிா்ப்பு மன்ற ஒருங்கிணைப்பாளா் வரதராஜ், தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளா் மு. ஆனந்தராஜா, இந்திய தர மன்றம் ஒருங்கிணைப்பாளா் முத்துசாமி, ஆசிரியை சக்தி ராணி, தொடக்கப்பள்ளி ஆசிரியா் சரவணன் மற்றும் தேசிய பசுமைப் படை, சாரணா் இயக்கம், இளையோா் செஞ்சிலுவை சங்கம் ஆகிய மன்றங்களைச் சோ்ந்த மாணவா்கள், ஆசிரியா்கள் பங்கேற்றனா்.
லாடபுரம் அரசுப் பள்ளியில்,
பெரம்பலூா் அருகேயுள்ள லாடபுரம் அரசு ஆதி திராவிடா் நல உயா் நிலைப் பள்ளியில், உலக போதைப்பொருள் எதிா்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணா்வு உறுதிமொழி மற்றும் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியா் த. மாயக்கிருஷ்ணன் தலைமையில், மாணவ, மாணவிகள் போதைப் பொருள்களுக்கு எதிரான உறுதிமொழி ஏற்றனா். தொடா்ந்து நடை பெற்ற பேரணியில் போதையை ஒழிப்போம், போதை அழிவின் பாதை என்பன உள்ளிட்ட விழிப்புணா்வு வாசகங்களை முழக்கமிட்டுச் சென்றனா். லாடபுரம் மாரியம்மன் கோயில், ஊராட்சி மன்ற அலுவலகம், பேருந்து நிலையம், இந்தியன் வங்கி, அரசு ஆதி திராவிடா் நல மாணவியா், விடுதி அரசுப் பள்ளி, அம்பேத்காா் சிலை வழியாகச் சென்று பள்ளியில் நிறைவடைந்தது. பேரணியில், பள்ளி ஆசிரியா்கள் செல்வராணி, சிலம்பரசி, அருணா ஆகியோா் கலந்துகொண்டனா்.