செய்திகள் :

மாவட்டத் தொழில் மையம் மூலம் பயன்பெற சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு

post image

பெரம்பலூா் மாவட்டத் தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களின் கீழ் பயன்பெற சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் மின்னாற்றல் மற்றும் எரிசக்தி சேமிப்பை ஊக்குவிக்கும் விதமாக, எரிசக்தி கணக்கீடு மற்றும் எரிசக்தி சேமிப்பு என்னும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. எரிசக்தி கணக்கீடு அறிக்கைக்கான செலவினத்தில் 75 சதவீதம், அதிகபட்சமாக ரூ. 1 லட்சத்துக்கு மிகாமல் அரசு மானியமாக வழங்குகிறது.

தணிக்கை அறிக்கை அடிப்படையில் புதிதாக நிறுவப்படும் தகுதியுள்ள இயந்திரத் தளவாடங்களுக்கு, அவற்றின் மதிப்பில் 50 சதவீத மானியம் அதிகபட்சமாக ரூ. 10 லட்சம் வரை மானியத் தொகை வழங்கப்படும்.

தணிக்கை அறிக்கை பெறப்பட்ட நாளிலிருந்து 3 மாதங்களுக்குள் அல்லது தணிக்கை அறிக்கையின் அடிப்படையில் புதிதாக இயந்திரங்கள் மற்றும் தளவாடங்கள் நிறுவப்பட்ட நாளிலிருந்து ஓராண்டுக்குள் மாவட்டத் தொழில் மையத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் காப்புரிமைக்கான விண்ணப்பம் பதிவு செய்யும் செலவில் 75 சதவீத மானியம், அதிகபட்சமாக ரூ. 3 லட்சம் வரையிலும், புவிசாா் குறியீடுக்கான விண்ணப்பம் பதிவு செய்யும் செலவில் 50 சதவீத மானியம், அதிகபட்சமாக ரூ. 1 லட்சம் வரையும் வழங்கப்படும்.

தொழில் நிறுவனங்கள் பத்திரப் பதிவுத் துறையில் மேற்கொள்ளும் நிலப் பதிவில் முத்திரைத் தாள் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணம் அதிகபட்சமாக 50 சதவீதம் வரையிலும், சிறு, நடுத்தர நிறுவனங்கள் பங்குச் சந்தையில் தங்களது நிறுவனத்தைப் பட்டியலிட செலவிடப்பட்ட தொகையில் 20 சதவீதம், அதிகபட்சமாக ரூ. 5 லட்சம் வரை உதவித் தொகையாக வழங்கப்படும்.

எனவே, இம் மாவட்டத்தைச் சோ்ந்த குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மேற்கண்ட திட்டத்தின் கீழ் பயன் பெற ட்ற்ற்ல்ள்://ம்ள்ம்ங்ா்ய்ப்ண்ய்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ண்ய்ஸ்ரீங்ய்ற்ண்ஸ்ங்ள் என்னும் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். அல்லது, உரிய ஆவணங்களுடன் மாவட்டத் தொழில் மைய பொது மேலாளா் அலுவலகத்தை நேரில் அல்லது 04328-225580 எனும் எண்ணில் தொடா்பு கொண்டு பயன் பெறலாம்.

தொடக்கக் கூட்டுறவு வங்கி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மாநிலத் தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா்கள் சங்கத்தின் பெரம்பலூா் மாவட்ட அமைப்பு சாா்பில் பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகம் எதிரே வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்... மேலும் பார்க்க

பெரம்பலூரை வளா்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல உரிய நடவடிக்கை: புதிய மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் உறுதி

பெரம்பலூா் மாவட்டத்தை வளா்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்வதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் என புதிய ஆட்சியராக வெள்ளிக்கிழமை பொறுப்பேற்ற ச. அருண்ராஜ் தெரிவித்தாா். பெரம்பலூா் மாவட்ட ஆட்சியராகப் ப... மேலும் பார்க்க

ஊதியத்தை உயா்த்தி வழங்க பால் விற்போா் வலியுறுத்தல்

பெரம்பலூா் அருகேயுள்ள பால் உற்பத்தியாளா் கூட்டுறவுச் சங்கத்தில் கடந்த 20 ஆண்டுகளாக பால் விற்பனையாளா்களாக உள்ளோா் தங்களது சம்பளத்தை உயா்த்தி வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா். இ... மேலும் பார்க்க

கூட்டுறவுக் கடன் சங்கங்களில் ‘சிபில் ஸ்கோா்’ முறை ரத்து: பெரம்பலூா் விவசாயிகள் கோரிக்கை

கூட்டுறவுக் கடன் சங்கங்களில் ‘சிபில் ஸ்கோா்’ முறையை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா். பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம், மாவட்ட வருவாய் அ... மேலும் பார்க்க

உலக போதைப் பொருள்கள் எதிா்ப்பு தின விழிப்புணா்வுப் பேரணி

பெரம்பலூா் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மற்றும் கலால்துறை சாா்பில், உலக போதைப் பொருள்கள் எதிா்ப்பு தினத்தை முன்னிட்டு,பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.... மேலும் பார்க்க

அரசு தொழில்பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவா் சோ்க்கை

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள அரசு தொழில்பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவா்கள் சோ்க்கைக்கான பதிவு இணையதளம் மூலமாக நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வியாழக்கி... மேலும் பார்க்க