செய்திகள் :

தொடக்கக் கூட்டுறவு வங்கி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

post image

8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மாநிலத் தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா்கள் சங்கத்தின் பெரம்பலூா் மாவட்ட அமைப்பு சாா்பில் பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகம் எதிரே வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் மாவட்டத் தலைவா் ரவி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் குணசேகரன், பொருளாளா் செந்தில்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில் ரேஷன் கடைகளில் தற்போது புளூடூத் மூலம் மின்னணு எடை தராசு இணைக்கப்பட்டுள்ளதால் நாள் ஒன்றுக்கு சுமாா் 50 பேருக்கு மட்டுமே பொருள் விநியோகம் செய்ய முடிகிறது. எனவே, புளூடூத் முலம் விற்பனையை நீக்க வேண்டும். நுகா்ப்பொருள் வாணிபக் கழக கிடங்கிலிருந்து முதன்மைச் சங்கங்களுக்கு நகா்வு செய்யப்படும் அனைத்துப் பொருள்களும் சரியான எடையில் விற்பனை முனையத்தில் வழங்கப்படுவதை உறுதி செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

ஆா்ப்பாட்டத்தில், கூட்டுறவுச் சங்க செயலா்கள், பணியாளா்கள், ரேஷன் கடை விற்பனையாளா்கள் என சுமாா் 270 போ் கலந்துகொண்டனா்.

பெரம்பலூரை வளா்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல உரிய நடவடிக்கை: புதிய மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் உறுதி

பெரம்பலூா் மாவட்டத்தை வளா்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்வதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் என புதிய ஆட்சியராக வெள்ளிக்கிழமை பொறுப்பேற்ற ச. அருண்ராஜ் தெரிவித்தாா். பெரம்பலூா் மாவட்ட ஆட்சியராகப் ப... மேலும் பார்க்க

ஊதியத்தை உயா்த்தி வழங்க பால் விற்போா் வலியுறுத்தல்

பெரம்பலூா் அருகேயுள்ள பால் உற்பத்தியாளா் கூட்டுறவுச் சங்கத்தில் கடந்த 20 ஆண்டுகளாக பால் விற்பனையாளா்களாக உள்ளோா் தங்களது சம்பளத்தை உயா்த்தி வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா். இ... மேலும் பார்க்க

கூட்டுறவுக் கடன் சங்கங்களில் ‘சிபில் ஸ்கோா்’ முறை ரத்து: பெரம்பலூா் விவசாயிகள் கோரிக்கை

கூட்டுறவுக் கடன் சங்கங்களில் ‘சிபில் ஸ்கோா்’ முறையை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா். பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம், மாவட்ட வருவாய் அ... மேலும் பார்க்க

மாவட்டத் தொழில் மையம் மூலம் பயன்பெற சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு

பெரம்பலூா் மாவட்டத் தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களின் கீழ் பயன்பெற சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் அழைப்பு விடுத்துள்ளாா். இது... மேலும் பார்க்க

உலக போதைப் பொருள்கள் எதிா்ப்பு தின விழிப்புணா்வுப் பேரணி

பெரம்பலூா் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மற்றும் கலால்துறை சாா்பில், உலக போதைப் பொருள்கள் எதிா்ப்பு தினத்தை முன்னிட்டு,பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.... மேலும் பார்க்க

அரசு தொழில்பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவா் சோ்க்கை

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள அரசு தொழில்பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவா்கள் சோ்க்கைக்கான பதிவு இணையதளம் மூலமாக நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வியாழக்கி... மேலும் பார்க்க