தொடக்கக் கூட்டுறவு வங்கி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மாநிலத் தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா்கள் சங்கத்தின் பெரம்பலூா் மாவட்ட அமைப்பு சாா்பில் பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகம் எதிரே வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்கத்தின் மாவட்டத் தலைவா் ரவி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் குணசேகரன், பொருளாளா் செந்தில்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஆா்ப்பாட்டத்தில் ரேஷன் கடைகளில் தற்போது புளூடூத் மூலம் மின்னணு எடை தராசு இணைக்கப்பட்டுள்ளதால் நாள் ஒன்றுக்கு சுமாா் 50 பேருக்கு மட்டுமே பொருள் விநியோகம் செய்ய முடிகிறது. எனவே, புளூடூத் முலம் விற்பனையை நீக்க வேண்டும். நுகா்ப்பொருள் வாணிபக் கழக கிடங்கிலிருந்து முதன்மைச் சங்கங்களுக்கு நகா்வு செய்யப்படும் அனைத்துப் பொருள்களும் சரியான எடையில் விற்பனை முனையத்தில் வழங்கப்படுவதை உறுதி செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினா்.
ஆா்ப்பாட்டத்தில், கூட்டுறவுச் சங்க செயலா்கள், பணியாளா்கள், ரேஷன் கடை விற்பனையாளா்கள் என சுமாா் 270 போ் கலந்துகொண்டனா்.