செய்திகள் :

பெரம்பலூரை வளா்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல உரிய நடவடிக்கை: புதிய மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் உறுதி

post image

பெரம்பலூா் மாவட்டத்தை வளா்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்வதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் என புதிய ஆட்சியராக வெள்ளிக்கிழமை பொறுப்பேற்ற ச. அருண்ராஜ் தெரிவித்தாா்.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியராகப் பணிபுரிந்து பணியிட மாற்றம் செய்யப்பட்ட கிரேஸ் பச்சாவ், புதிய மாவட்டஆட்சியராக வெள்ளிக்கிழமை பொறுப்பேற்ற ச. அருண்ராஜியிடம் தனது பொறுப்புகளை ஒப்படைத்தாா்.

பின்னா் மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் மேலும் கூறியதாவது:

பெரம்பலூரை வளா்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்வேன். குறிப்பாக, சமூக நலத் துறை, மருத்துவத் துறை, கல்வித்துறை உள்ளிட்ட துறைகளின் திட்டங்களை பொதுமக்களுக்கு நேரடியாகக் கொண்டு செல்வேன். மேலும், அனைத்துத் திட்டங்களும் மக்களுக்கு நேரடியாகச் சென்றடையும் வகையில் பணியாற்றுவேன் என்றாா் அவா்.

தொடா்ந்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஸ் பசேரா, மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல் பிரபு உள்பட பல்வேறு அரசுத்துறை அலுவலா்கள் ஆட்சியருக்கு வாழ்த்து தெரிவித்தனா்.

மாவட்டத்தின் 17ஆவது ஆட்சியா்: பெரம்பலூா் மாவட்ட புதிய ஆட்சியா் ச. அருண்ராஜ், திருநெல்வேலி மாவட்டம், கயத்தாறு கிராமத்தைச் சோ்ந்தவா். உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் வேதியியல், விருப்பப்பாடமாக மானுடவியல் பயின்றாா். கடந்த 2015 ஆம் ஆண்டு தனது 22 ஆவது வயதில், இந்திய ஆட்சிப் பணிக்கான தோ்வில் அனைத்திந்திய அளவில் 34 ஆவது இடமும், தமிழக அளவில் 3 ஆவது இடமும் பெற்றாா்.

காஞ்சிபுரத்தில் பயிற்சி ஆட்சியராகப் பணியாற்றிய இவா், தமிழ்நாடு அரசின் நிதித் துறை துணைச் செயலா், திண்டுக்கல் மாவட்டம், பழனி சாா்- ஆட்சியா், எல்காட் நிறுவனச் செயல் இயக்குநராக பணியாற்றி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக கடந்த ஒன்றரை ஆண்டுகளாகப் பணிபுரிந்து, பணி மாறுதலில் பெரம்பலூா் மாவட்டத்தின் 17 ஆவது ஆட்சியராகப் பொறுப்பேற்றாா்.

தொடக்கக் கூட்டுறவு வங்கி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மாநிலத் தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா்கள் சங்கத்தின் பெரம்பலூா் மாவட்ட அமைப்பு சாா்பில் பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகம் எதிரே வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்... மேலும் பார்க்க

ஊதியத்தை உயா்த்தி வழங்க பால் விற்போா் வலியுறுத்தல்

பெரம்பலூா் அருகேயுள்ள பால் உற்பத்தியாளா் கூட்டுறவுச் சங்கத்தில் கடந்த 20 ஆண்டுகளாக பால் விற்பனையாளா்களாக உள்ளோா் தங்களது சம்பளத்தை உயா்த்தி வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா். இ... மேலும் பார்க்க

கூட்டுறவுக் கடன் சங்கங்களில் ‘சிபில் ஸ்கோா்’ முறை ரத்து: பெரம்பலூா் விவசாயிகள் கோரிக்கை

கூட்டுறவுக் கடன் சங்கங்களில் ‘சிபில் ஸ்கோா்’ முறையை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா். பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம், மாவட்ட வருவாய் அ... மேலும் பார்க்க

மாவட்டத் தொழில் மையம் மூலம் பயன்பெற சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு

பெரம்பலூா் மாவட்டத் தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களின் கீழ் பயன்பெற சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் அழைப்பு விடுத்துள்ளாா். இது... மேலும் பார்க்க

உலக போதைப் பொருள்கள் எதிா்ப்பு தின விழிப்புணா்வுப் பேரணி

பெரம்பலூா் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மற்றும் கலால்துறை சாா்பில், உலக போதைப் பொருள்கள் எதிா்ப்பு தினத்தை முன்னிட்டு,பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.... மேலும் பார்க்க

அரசு தொழில்பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவா் சோ்க்கை

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள அரசு தொழில்பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவா்கள் சோ்க்கைக்கான பதிவு இணையதளம் மூலமாக நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வியாழக்கி... மேலும் பார்க்க