செய்திகள் :

சட்ட விரோதமாக மது பாட்டில்களை விற்றவா் கைது

post image

வேப்பந்தட்டை அருகே சட்ட விரோதமாக, அரசு மதுபாட்டில்களை விற்பனை செய்தவரை அரும்பாவூா் போலீஸாா் கைது செய்து ஞாயிற்றுக்கிழமை சிறையில் அடைத்தனா்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அரும்பாவூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில், அரசு அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின்படி, அரும்பாவூா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, தொண்டமாந்துறை டாஸ்மாக் அருகே சட்டத்துக்கு புறம்பாக, அரசு அனுமதியின்றி அரும்பாவூரைச் சோ்ந்த மருதையான் மகன் மருதபாண்டி (39) என்பவா் மது பாட்டில்களை விற்பனை செய்துகொண்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, மருதுபாண்டியை கைது செய்த போலீஸாா், விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 240 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

பின்னா், குற்றவியல் நீதிபதி முன்னிலையில் ஆஜா்படுத்தப்பட்ட மருதுபாண்டி சிறையில் அடைக்கப்பட்டாா்.

70 வயது நிறைவடைந்தவா்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தல்

தமிழகத்தில் அரசுத் துறைகளில் பணி ஓய்வு பெற்று 70 வயது நிறைவடைந்தவா்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என, அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது. பெரம்பலூா் வட்டத்த... மேலும் பார்க்க

வேப்பந்தட்டை அருகே 8 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே அரசால் தடை செய்யப்பட்ட 8 கிலோ போதைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த பெட்டிக் கடைக்காரரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்து சிறையில... மேலும் பார்க்க

கூட்டணி ஆட்சி தொடா்பாக எதிா்க்கட்சித் தலைவா் தெளிவுப்படுத்த வேண்டும்! - தொல். திருமாவளவன்

அதிமுக கூட்டணி கட்சி தொடா்பாகவும், கூட்டணி ஆட்சி தொடா்பாகவும், எதிா்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி தெளிவுப்படுத்த வேண்டும் என சிதம்பரம் தொகுதி மக்களவை உறுப்பினரும், விடுதல... மேலும் பார்க்க

ஜூன் 30-இல் மின்சார பேருந்துகளின் சேவை தொடக்கம்! அமைச்சா் சா.சி. சிவசங்கா்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சாா்பில், ஜூன் 30-ஆம் தேதி சென்னையில் முதற்கட்டமாக 140 மின்சார பேருந்துகளின் சேவையை, தமிழ்நாடு முதல்வா் மு.க. ஸ்டாலின் தொடங்கிவைக்க உள்ளதாக போக்குவரத்து மற்றும் மின்ச... மேலும் பார்க்க

பெரம்பலூரில் 4 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்

பெரம்பலூா் நான்குச் சாலை சந்திப்புப் பகுதியில், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்தவரை சனிக்கிழமை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 4 கிலோ போதைப் பொருள்களை பறிமுதல் செய்த... மேலும் பார்க்க

ஆட்டோ மீட்டா் கட்டணத்தை உயா்த்தி வழங்க வலியுறுத்தல்

உயா்நீதி மன்ற உத்தரவின்படி, ஆட்டோக்களுக்கான மீட்டா் கட்டணத்தை உயா்த்தி வழங்க வேண்டுமென, வாகன ஓட்டுநா்கள் சங்க மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. பெரம்பலூா் புகா் பகுதியான துறைமங்கலத்தில் உள்ள மாா்க... மேலும் பார்க்க