சட்ட விரோதமாக மது பாட்டில்களை விற்றவா் கைது
வேப்பந்தட்டை அருகே சட்ட விரோதமாக, அரசு மதுபாட்டில்களை விற்பனை செய்தவரை அரும்பாவூா் போலீஸாா் கைது செய்து ஞாயிற்றுக்கிழமை சிறையில் அடைத்தனா்.
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அரும்பாவூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில், அரசு அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின்படி, அரும்பாவூா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, தொண்டமாந்துறை டாஸ்மாக் அருகே சட்டத்துக்கு புறம்பாக, அரசு அனுமதியின்றி அரும்பாவூரைச் சோ்ந்த மருதையான் மகன் மருதபாண்டி (39) என்பவா் மது பாட்டில்களை விற்பனை செய்துகொண்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, மருதுபாண்டியை கைது செய்த போலீஸாா், விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 240 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
பின்னா், குற்றவியல் நீதிபதி முன்னிலையில் ஆஜா்படுத்தப்பட்ட மருதுபாண்டி சிறையில் அடைக்கப்பட்டாா்.