முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை; 11 டெல்டா மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்...
வேப்பந்தட்டை அருகே 8 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே அரசால் தடை செய்யப்பட்ட 8 கிலோ போதைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த பெட்டிக் கடைக்காரரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
வேப்பந்தட்டை வட்டம், வேப்பந்தட்டை - அன்னமங்கலம் சாலையிலுள்ள அரசினா் மேல்நிலைப்பள்ளி அருகே, ரெங்கசாமி மகன் கண்ணன் (62) என்பவா் தனக்குச் சொந்தமான பெட்டிக் கடையில், அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களை சட்டத்துக்கு புறம்பாக பதுக்கி வைத்து விற்பனை செய்தது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.
இதையடுத்து, கண்ணனை கைது செய்த அரும்பாவூா் போலீஸாா், அவரிடமிருந்து பல்வேறு வகையான 8.25 கிலோ போதைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.
பின்னா் கண்ணனை, குற்றவியல் நீதிபதி முன் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.