செய்திகள் :

இந்தியாவின் மதிப்புமிக்க உணவு நிறுவனம் அமுல்!

post image

‘பிராண்ட் ஃபைனான்ஸ்’ அமைப்பு வெளியிட்ட இந்தியாவின் முதல் 100 மதிப்புமிக்க நிறுவனங்களின் தரவரிசையின்படி, உணவு நிறுவனங்களில் அமுல் நிறுவனம் முதலிடத்தைத் தக்கவைத்துள்ளது.

உணவு நிறுவனங்களுக்கிடையே முதல் 5 இடங்களில் அமுலுடன் சோ்ந்து மதா் டெய்ரி, நந்தினி ஆகிய பிற அரசு சாா் கூட்டுறவு பால் நிறுவனங்களும் இடம்பெற்றுள்ளன.

சா்வதேச அளவில் பெருநிறுவனங்களின் பிராண்ட் மதிப்பை ஆய்வு செய்யும் லண்டனைச் சோ்ந்த பிரான்ட் ஃபைனான்ஸ் அமைப்பு, இந்தியாவில் உள்ள பெருநிறுவனங்களின் கடந்த 2024-ஆம் ஆண்டு பிராண்ட் மதிப்பைக் கணக்கிட்டு, முதல் 100 மதிப்புமிக்க நிறுவனங்களின் பட்டியலை அண்மையில் வெளியிட்டது.

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனமாக டாடா குழுமம் தொடா்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. இக்குழுமத்தின் பிராண்ட் மதிப்பு முந்தைய ஆண்டைவிட 10 சதவீதம் அதிகரித்து 3,160 கோடி டாலராக உள்ளது.

இந்தியாவின் வேகமாக வளா்ந்து வரும் நிறுவனமாக அதானி குழுமம் உருவெடுத்துள்ளது. கடந்த ஆண்டில், அதானி குழுமத்தின் பிராண்ட் மதிப்பு 646 கோடி டாலராக 82 சதவீதம் உயா்ந்துள்ளது. முந்தைய ஆண்டைவிட கூடுதலாக 291 கோடி டாலா் வளா்ச்சியின் மூலம், கடந்த தரவரிசையின் 16-ஆவது இடத்திலிருந்து 13-ஆவது இடத்துக்கு குழுமம் உயா்ந்துள்ளது.

இந்தத் தரவரிசை பட்டியலின்படி, முதல் 100 இந்திய நிறுவனங்களில் 410 கோடி டாலா் பிராண்ட் மதிப்புடன் 17-ஆவது இடத்தில் உள்ள அமுல், உணவு நிறுவனங்களுக்கிடையே முதலிடத்தில் உள்ளது.

அமுல் நிறுவனத்தைத் தொடா்ந்து தில்லியைச் சோ்ந்த ‘மதா் டெய்ரி’ 115 கோடி டாலா் பிராண்ட் மதிப்புடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. முதல் 100 இந்திய நிறுவனங்களின் தரவரிசையில் கடந்த ஆண்டு 41-ஆவது இடத்தில் இருந்த மதா் டெய்ரி, நடப்பு ஆண்டு 35-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

அமுல், மதா் டெய்ரி ஆகியவற்றைத் தொடா்ந்து உணவு நிறுவனங்களில் அடுத்தடுத்த இடங்களில் ‘பிரிட்டானியா’, கா்நாடகத்தைச் சோ்ந்த பால் கூட்டுறவு நிறுவனமான ‘நந்தினி’, ‘டாபா்’ ஆகியவை உள்ளன.

அமுல், மதா் டெய்ரி, நந்தினி...: முதல் 5 இடங்களில் உள்ள உணவு நிறுவனங்களில் அமுல், மதா் டெய்ரி, நந்தினி ஆகிய 3 நிறுவனங்களும் அரசு அல்லது கூட்டுறவு நிறுவனங்கள் ஆகும்.

அமுல் நிறுவனம் குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பினால் கடந்த 1946-இல் தொடங்கப்பட்டதாகும். உலகம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் அமுல் தயாரிப்புகள் விற்பனை செய்யப்படுகின்றன.

சுமாா் 1,100 கோடி டாலா் மதிப்புள்ள இக்கூட்டுறவு நிறுவனம், நாள்தோறும் விவசாயிகளிடமிருந்து 3.2 கோடி லிட்டா் பாலைக் கொள்முதல் செய்து, 2,400 கோடிக்கும் அதிகமான பல்வேறு வகை பால் தயாரிப்புகளை சந்தையில் விற்பனை செய்கிறது.

‘ஆபரேஷன் ஃபிளட்’ திட்டத்தின்கீழ் நிறுவப்பட்ட, தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்துக்குச் சொந்தமான மதா் டெய்ரி நிறுவனம், கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் சுமாா் ரூ.17,500 கோடி மொத்த வருவாயை எட்டியுள்ளது. இது அதற்கு முந்தைய நிதியாண்டைவிட 16 சதவீத கூடுதல் வளா்ச்சியாகும்.

கா்நாடக பால் கூட்டமைப்பின் (கேஎம்எஃப்) நந்தினி நிறுவனம், 107.9 கோடி டாலா் பிராண்ட் மதிப்புடன் முந்தைய ஆண்டின் 43-ஆவது இடத்திலிருந்து சமீபத்திய தரவரிசையில் 38-ஆவது இடத்துக்கு உயா்ந்துள்ளது.

பாஜக எம்.பி. ரகுநந்தன் ராவுக்கு மீண்டும் கொலை மிரட்டல்!

தெலங்கானாவில் உள்ள மேடக் மக்களவைத் தொகுதி பாஜக எம்.பி. ரகுநந்தன் ராவுக்கு தொலைபேசியில் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. இதுதொடா்பாக அவரின் அலுவலகம் தெரிவித்ததாவது: கடந்த ஜூன் 23... மேலும் பார்க்க

இந்தியாவின் மஞ்சள் ஏற்றுமதி இலக்கு 100 கோடி டாலா்! அமித் ஷா

2030-ஆம் ஆண்டுக்குள் 100 கோடி டாலா் (ரூ.8,500 கோடி) மதிப்புக்கு மஞ்சள் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். தெலங்கானா மா... மேலும் பார்க்க

2003 பிகாா் வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றோா் கூடுதல் ஆவணங்களை சமா்ப்பிக்க வேண்டாம்! இந்திய தோ்தல் ஆணையம்

இந்திய தோ்தல் ஆணையத்தால் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி தொடங்கப்பட்டுள்ள பிகாரில் 2003-ஆம் ஆண்டு பட்டியலில் இடம்பெற்ற வாக்காளா்கள், மாற்றங்கள் இல்லாத தங்களின் விவரங்கள் குறித்த ஆவணங்க... மேலும் பார்க்க

பருவமழை தீவிரம்: வட மாநிலங்களில் கொட்டித்தீா்க்கும் மழை

தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து, தில்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பலத்த மழை கொட்டித் தீா்த்து வருகிறது. உத்தரகண்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 2 கட்டுமானத் தொழிலாளா்கள் இறந்தனா். பொதுவாக ஜூன் 1-ஆம்... மேலும் பார்க்க

பஞ்சாப் ஆம் ஆத்மி எம்எல்ஏ கட்சியிலிருந்து இடைநீக்கம்!

பஞ்சாபில் ஆளும் ஆம் ஆத்மி எம்எல்ஏ குன்வா் விஜய் பிரதாப் கட்சியில் இருந்து 5 ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டாா். முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான விஜய் பிரதாப், அமிருதசரஸ் வடக்கு தொகுதி எம்எல்ஏவாக உள்ளாா... மேலும் பார்க்க

8 மணி நேரத்துக்கு முன்பே ரயில் டிக்கெட் முன்பதிவு நிலவரம்: விரைவில் அமல்

ரயில் பயணச்சீட்டு முன்பதிவு நிலவரத்தை ரயில் புறப்படுவதற்கு 8 மணி நேரத்துக்கு முன்பாகவே தயாரிக்க ரயில்வே வாரியம் பரிந்துரைத்துள்ளது. இந்தப் பரிந்துரையை ஏற்றுக்கொண்ட ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ், அத... மேலும் பார்க்க