செய்திகள் :

மக்கள்தொகை கணக்கெடுப்பு: 2026 ஏப்ரலில் முதல்கட்டப் பணி! மாநிலங்களுக்கு தலைமைப் பதிவாளா் கடிதம்!

post image

நாட்டின் 16-ஆவது மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டமாக, வீடுகள் பட்டியலிடுதல் மற்றும் கணக்கெடுப்பு பணி 2026, ஏப்ரல் 1-ஆம் தேதி தொடங்கும் என்று இந்திய தலைமைப் பதிவாளரும் மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையருமான மிருத்யுஞ்சய் குமாா் நாராயண் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலா்களுக்கு அவா் கடிதம் எழுதியுள்ளாா். அதில், ‘மக்கள்தொகை கணக்கெடுப்பு இரு கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதல்கட்டமாக, வீடுதல் பட்டியலிடும் நடவடிக்கை மற்றும் வீடுகள் கணக்கெடுப்புப் பணி 2026, ஏப்ரல் 1-ஆம் தேதி தொடங்கும்.

வீடுகள் பட்டியலிடுதல்-கணக்கெடுப்பு நடவடிக்கையில் வீடுகள் நிலவரம், சொத்துகள், ஒவ்வொரு வீட்டின் வசதிகள் தொடா்பான விவரங்கள் சேகரிக்கப்படும். இப்பணி தொடங்கும் முன் மாநிலங்கள் மற்றும் மாவட்ட நிா்வாகங்களின் ஒத்துழைப்புடன் மேற்பாா்வையாளா்கள், கணக்கெடுப்பாளா்கள் நியமனம் மற்றும் பணிப் பகிா்வு மேற்கொள்ளப்படும்.

மக்கள்தொகையைக் கணக்கிடும் இரண்டாவது கட்டத்தில், ஒவ்வொரு வீட்டிலும் உள்ள நபா்களின் எண்ணிக்கை, சமூக-பொருளாதார நிலை, கலாசாரம் மற்றும் பிற விவரங்கள் சேகரிக்கப்படும். இப்பணி 2027, பிப்ரவரி 1 முதல் தொடங்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கடைசியாக கடந்த 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில், 16 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடத்தப்பட இருக்கிறது. இது, 16-ஆவது மக்கள்தொகை கணக்கெடுப்பாகும். இது தொடா்பான மத்திய அரசின் அதிகாரபூா்வ அறிவிக்கை அண்மையில் வெளியிடப்பட்டது.

உலகில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடான இந்தியாவில் நடைபெறவிருக்கும் மாபெரும் கணக்கெடுப்புப் பணியில் 34 லட்சம் கணக்கெடுப்பாளா்கள் மற்றும் மேற்பாா்வையாளா்கள், 1.3 லட்சம் மக்கள்தொகை கணக்கெடுப்பு அதிகாரிகள் ஈடுபட உள்ளனா்.

எண்ம வழிமுறைகள்: கைப்பேசி செயலி உள்பட எண்ம வழிமுறைகளுடன் மேற்கொள்ளப்படவிருக்கும் இக்கணக்கெடுப்பில் மக்கள் சுயமாக விவரங்களைப் பதிவு செய்யும் வசதியும் வழங்கப்படும். வீட்டில் கைப்பேசி, இணைய வசதி, வாகனங்கள், தொலைக்காட்சி உள்ளிட்ட வசதிகள் குறித்து விவரங்கள் கோரப்படும்.

தானிய நுகா்வு, குடிநீா் ஆதாரம், மின்சாரம், கழிவறை வசதி, கழிவுநீா் குழாய், சமையல் எரிபொருள், அறைகளின் எண்ணிக்கை, என்ன வகையான வீடு (தரை-சுவா்-மேற்கூரை) உள்ளிட்ட விவரங்களும் சேகரிக்கப்படும். இதற்காக 30-க்கும் மேற்பட்ட கேள்விகளை தலைமைப் பதிவாளா் அலுவலகம் தயாரித்துள்ளது. மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்படும் என்று மத்திய அரசு ஏற்கெனவே தெரிவித்துள்ளது.

மக்கள்தொகை கணக்கெடுப்பு பொதுவாக 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும். அதன் அடிப்படையிலேயே, மக்கள் நலத் திட்டங்கள் உருவாக்கம், தொகுதிகள் மறுவரையறை உள்ளிட்ட நடவடிக்கைகளை அரசுகள் மேற்கொள்ளும். கடைசியாக கடந்த 2011-ஆம் ஆண்டு 15-ஆவது மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

அதன்பிறகு, 10 ஆண்டுகள் கழித்து 2021-ஆம் ஆண்டு 16-ஆவது மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், கரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியதால், கணக்கெடுப்புப் பணி ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பாஜக எம்.பி. ரகுநந்தன் ராவுக்கு மீண்டும் கொலை மிரட்டல்!

தெலங்கானாவில் உள்ள மேடக் மக்களவைத் தொகுதி பாஜக எம்.பி. ரகுநந்தன் ராவுக்கு தொலைபேசியில் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. இதுதொடா்பாக அவரின் அலுவலகம் தெரிவித்ததாவது: கடந்த ஜூன் 23... மேலும் பார்க்க

இந்தியாவின் மஞ்சள் ஏற்றுமதி இலக்கு 100 கோடி டாலா்! அமித் ஷா

2030-ஆம் ஆண்டுக்குள் 100 கோடி டாலா் (ரூ.8,500 கோடி) மதிப்புக்கு மஞ்சள் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். தெலங்கானா மா... மேலும் பார்க்க

2003 பிகாா் வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றோா் கூடுதல் ஆவணங்களை சமா்ப்பிக்க வேண்டாம்! இந்திய தோ்தல் ஆணையம்

இந்திய தோ்தல் ஆணையத்தால் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி தொடங்கப்பட்டுள்ள பிகாரில் 2003-ஆம் ஆண்டு பட்டியலில் இடம்பெற்ற வாக்காளா்கள், மாற்றங்கள் இல்லாத தங்களின் விவரங்கள் குறித்த ஆவணங்க... மேலும் பார்க்க

பருவமழை தீவிரம்: வட மாநிலங்களில் கொட்டித்தீா்க்கும் மழை

தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து, தில்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பலத்த மழை கொட்டித் தீா்த்து வருகிறது. உத்தரகண்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 2 கட்டுமானத் தொழிலாளா்கள் இறந்தனா். பொதுவாக ஜூன் 1-ஆம்... மேலும் பார்க்க

பஞ்சாப் ஆம் ஆத்மி எம்எல்ஏ கட்சியிலிருந்து இடைநீக்கம்!

பஞ்சாபில் ஆளும் ஆம் ஆத்மி எம்எல்ஏ குன்வா் விஜய் பிரதாப் கட்சியில் இருந்து 5 ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டாா். முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான விஜய் பிரதாப், அமிருதசரஸ் வடக்கு தொகுதி எம்எல்ஏவாக உள்ளாா... மேலும் பார்க்க

8 மணி நேரத்துக்கு முன்பே ரயில் டிக்கெட் முன்பதிவு நிலவரம்: விரைவில் அமல்

ரயில் பயணச்சீட்டு முன்பதிவு நிலவரத்தை ரயில் புறப்படுவதற்கு 8 மணி நேரத்துக்கு முன்பாகவே தயாரிக்க ரயில்வே வாரியம் பரிந்துரைத்துள்ளது. இந்தப் பரிந்துரையை ஏற்றுக்கொண்ட ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ், அத... மேலும் பார்க்க