செய்திகள் :

புரி ரத யாத்திரை கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம்!

post image

ஒடிஸாவில் உலகப் புகழ்பெற்ற புரி ஜெகந்நாதர் ரத யாத்திரை கோலாகலமாக நடைபெற்றுவரும் நிலையில், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனா்.

இந்த விழாவில் எதிர்பாராதவிதமாக ஞாயிற்றுக்கிழமை(ஜூன் 29) கடுங்கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதில் பக்தர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் பலர் மயங்கி விழுந்தனர். இந்த விபத்தில் துரதிருஷ்டவசமாக 3 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த விபத்து நாடெங்கிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், மோசமான நிர்வாக நடவடிக்கைகளால் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக ஒடிஸாவில் ஆளும் பாஜக அரசு மீது விமர்சனம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில், புரி ரத யாத்திரை கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கி ஒடிஸா அரசு உத்தரவிட்டுள்ளது.

பிரதான கோயிலில் இருந்து 2.6 கி.மீ. தொலைவில் உள்ள ஸ்ரீகுந்திச்சா கோயிலுக்கு ரதங்கள் இழுத்துச் செல்லப்பட்டு, அங்கு 9 நாட்கள் வழிபாட்டுக்குப் பிறகு ரதங்கள் மீண்டும் ஜெகந்நாதா் ஆலயத்துக்குத் திரும்பும். ரத யாத்திரையையொட்டி முக்கிய விஐபிக்கள் பலர் கலந்துகொள்வதால், மத்திய ஆயுதக் காவல் படையினா், காவல் துறையினா், தேசிய பாதுகாப்புப் படை (என்எஸ்ஜி) உள்பட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

Rath Yatra stampede Odisha CM announces Rs 25 lakh assistance

திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் உபகரணங்கள் பற்றாக்குறை: விசாரணைக்கு சுகாதாரத் துறை உத்தரவு

கேரள தலைநகா் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போதுமான அறுவை சிகிச்சை உபகரணங்கள் இல்லை என்றும், இதனால், அறுவை சிகிச்சைகள் தாமதமாகி வருவதாகவும் மூத்த அரசு மருத்துவா் ஒருவா் புகாா் ... மேலும் பார்க்க

தில்லிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு: கொல்கத்தாவில் பத்திரமாக தரையிறக்கம்

ஏர் இந்தியாவின் போயிங் ட்ரீம்லைனர் ரக விமானம் ‘ஏஐ - 357’ ஞாயிற்றுக்கிழமை(ஜூன் 29) ஜப்பான் தலைநகர் டோக்கியோ நகரிலுள்ள ஹனேடா விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு புது தில்லிக்குச் சென்று கொண்டிருந்தபோது, ... மேலும் பார்க்க

ஹிந்தி எதிர்ப்பு எதிரொலி: மகாராஷ்டிரத்தில் மும்மொழிக் கொள்கை திரும்பப் பெறப்பட்டதாக அறிவிப்பு!

மும்பை: மகாராஷ்டிரத்தில் மும்மொழிக் கொள்கை திரும்பப் பெறப்படுவதாக முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தலைமையிலான மாநில அரசு ஞாயிற்றுக்கிழமை(ஜூன் 29) அறிவித்துள்ளது. மகாராஷ்டிரத்தில் மும்மொழிக் கொள்கையை அமல்ப... மேலும் பார்க்க

தில்லியில் காற்று மாசுபாட்டைக் குறைக்க செயற்கை மழை சோதனை: ஜூலை 4 தொடக்கம்!

புது தில்லி: தில்லியில் காற்று மாசு பிரச்னையை எதிா்க்கொள்ளும் விதமாக செயற்கை மழையை பொழியச் செய்யும் முன்னோட்ட சோதனை ஜூலை 4 முதல் 11 வரை செயல்படுத்தப்படவிருக்கிறது. ஐஐடி கான்பூர் இதற்கு தேவையான தொழில்ந... மேலும் பார்க்க

மஞ்சள் வாரியத்துக்கான புதிய தலைமையகம் திறப்பு! - எங்கே?

தேசிய மஞ்சள் வாரியத்துக்கான புதிய தலைமையகம் திறக்கப்பட்டுள்ளது. மஞ்சள் வாரிய தலைமையகத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று(ஜூன் 29) திறந்து வைத்தார்.தெலங்கானாவிலுள்ள நிஸாமாபாத் நகரில் மஞ்சள் வாரி... மேலும் பார்க்க

புதுப்பொலிவுடன் பஹல்காம்! சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

பஹல்காமில் பயங்கரவாத தாக்குதலின் வடு மறைந்து வருகிறது. சுற்றுலா பயணிகள் வருகையால் பஹல்காம் புதுப்பொலிவு பெற்றுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் பிரபல சுற்றுலா நகரான பஹல்காம் அருகேயுள்ள பைசாரன் பள்ளத்தாக்கு பகுத... மேலும் பார்க்க