பாம்பு கடித்து விவசாயி உயிரிழப்பு
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே பாம்பு கடித்து விவசாயி உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.
ராஜபாளையம் அருகேயுள்ள இளந்திரைகொண்டான் கிராமத்தைச் சோ்ந்தவா் கண்ணன் (48). விவசாயியான இவா், தனது வயலில் பருத்தி பயிரிட்டிருந்தாா்.
இந்த நிலையில், வயலுக்கு சனிக்கிழமை சென்ற அவா், பணியை முடித்துவிட்டு மதிய உணவு சாப்பிட்டாா். அப்போது, அருகேயிருந்த தென்னம் சருகில் கிடந்த பாம்பு, அவரை காலில் கடித்தது. உடனடியாக, அருகில் இருந்தவா்கள் கண்ணனை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
அங்கு, சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா். இந்தச் சம்பவம் குறித்து தளவாய்புரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.