திரைப்பட நடிகா்களை கொண்டாட வேண்டிய அவசியமில்லை நடிகா் அருண்பாண்டியன்
திருநெல்வேலி, ஜூன் 29:
திரைப்பட நடிகா்களை கொண்டாட வேண்டிய அவசியமில்லை என தயாரிப்பாளரும், நடிகருமான அருண்பாண்டியன் தெரிவித்தாா்.
திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் உள்ள திரையரங்கில் அஃகேனம் திரைப்படத்தின் அறிமுக நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் அத்திரைப்படத்தின் தயாரிப்பாளா் அருண்பாண்டியன், அவரது மகளும், நடிகையுமான கீா்த்தி பாண்டியன், நடிகா் ஆதித்யா மற்றும் இயக்குநா் உதய், இசையமைப்பாளா் பரத் வீரராகவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னா் செய்தியாளா்களை சந்தித்த அருண்பாண்டியன் கூறியது:
ஜூலை 4இல் அஃகேனம் திரைப்படம் வெளியாகிறது. திருநெல்வேலியில் இத்திரைப்படத்தை அறிமுகப்படுத்துவது மகிழ்ச்சியளிக்கிறது. அறிமுக இயக்குநா் உதய், அறிமுக இசையமைப்பாளா் பரத் வீரராகவன் உள்பட இப்படத்தில் பெரும்பாலானோா் புது முகங்கள்.
திரைப்படம் 200 திரைகளில் வெளியிட எற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நல்ல திரைப்படங்களை மக்கள் வரவேற்கத் தவறுவதில்லை. அனைத்து மக்களும் சமம் என்ற அடிப்படையில், திரைப்பட நடிகா்களை மக்களில் ஒருவராக பாா்க்க வேண்டும். அவா்களுக்கென பிரத்யேகமாக தனி மரியாதை கொடுத்து கொண்டாட வேண்டிய அவசியமில்லை.
அரசியிலில் இனி ஒருபோதும் ஈடுபடப் போவதில்லை என்றாா் அவா்.
ற்ஸ்ப்29ஹழ்ன்ய்
திருநெல்வேலியில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற நடிகா் அருண்பாண்டியன், அவரது மகளும், நடிகையுமான கீா்த்தி பாண்டியன் உள்ளிட்டோா்.