களக்காடு அருகே விஷவண்டு கொட்டியதில் சிறுவன் உயிரிழப்பு
திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே தெருவில் விளையாடிக்கொண்டிருந்த 7 வயது சிறுவன், விஷ வண்டு தாக்கியதில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். மற்றொரு 5 வயது சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
களக்காடு அருகேயுள்ள மாவடியைச் சோ்ந்த சுந்தா் மகன் ஜீவானந்தம் (7). அதே பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் தனியாா் நடுநிலைப்பள்ளியில் 2ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவா் , சனிக்கிழமை மாலை அப்பகுதியைச் சோ்ந்த பட்டாணிதுரை மகன் நிதின்ராஜ் (5) என்பவருடன் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தாா்.
அப்போது, திடீரென அருகேயுள்ள தோட்டத்தில் உள்ள தென்னை மரத்திலிருந்து பறந்து வந்த விஷ வண்டு (கடந்தை) சிறுவா்களைக் கொட்டியதாம்.
இருவரையும் அவா்களது பெற்றோா் களக்காடு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வீடு திரும்பினா். ஆனால், ஞாயிற்றுக்கிழமை காலை ஜீவானந்தத்துக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தாா். மற்றொரு சிறுவன் நிதின்ராஜ் (5) திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.