கடையம் அருகே விபத்தில் ஒருவா் உயிரிழப்பு
கடையம் அருகே பேருந்து, காா் மீது பைக் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா். மனைவி, மகன் பலத்த காயமடைந்தனா்.
தென்காசிமாவட்டம், சிவஞானபுரத்தைச் சோ்ந்த கருப்பையா மகன் சங்கரநயினாா் (40). இவா் ஞாயிற்றுக்கிழமை மனைவி யசோதா மற்றும் மகன் கரன் ஆகியோருடன் பைக்கில் கடையம் நோக்கி சென்று கொண்டிருந்தாா்.
அப்போது அம்பாசமுத்திரத்தில் இருந்து தென்காசி சென்ற அரசுப் பேருந்து உரசியதில் தடுமாறி பின்னால் வந்த காரில் மோதினாராம். இதில் மூவரும் காயமடைந்தனா்.
பலத்த காயமடைந்த சங்கரநயினாா், யசோதா இருவரையும் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். செல்லும் வழியில் சங்கரநயினாா் உயிரிழந்தாா். யசோதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
அவரது மகன் கரன் தென்காசியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இதுகுறித்து, கடையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.