செய்திகள் :

ஹிந்தி எதிர்ப்பு எதிரொலி: மகாராஷ்டிரத்தில் மும்மொழிக் கொள்கை திரும்பப் பெறப்பட்டதாக அறிவிப்பு!

post image

மும்பை: மகாராஷ்டிரத்தில் மும்மொழிக் கொள்கை திரும்பப் பெறப்படுவதாக முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தலைமையிலான மாநில அரசு ஞாயிற்றுக்கிழமை(ஜூன் 29) அறிவித்துள்ளது. மகாராஷ்டிரத்தில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த ஏற்கெனவே மாநில அரசால் இருமுறை அரசாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அவையனைத்தும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.

மாநிலம் முழுவதும் ஹிந்தி எதிர்ப்பு எதிரொலித்ததால், பாஜக அரசு எடுத்துள்ள தற்காலிக நடவடிக்கையாகவே இது பார்க்கப்படுகிறது.

ஏனெனில், பள்ளிகளில் மொழி கொள்கை வகுக்க ’நரேந்திர ஜாதவ் கமிட்டி’ என்ற நிபுணர் குழுவையும் அமைத்து முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் உத்தரவிட்டுள்ளார்.

“இந்த கமிட்டி, மும்மொழிக் கொள்கை தொடர்பாக ஏற்கெனவே மாஷேல்கர் கமிட்டி சமர்ப்பித்துள்ள அறிக்கையை ஆராய்வதுடன், அதனை எதிர்ப்போர் தரப்பிடமும் ஆலோசித்து கருத்துகளைக் கேட்டு அதன்பின், அரசுக்கு உரிய பரிந்துரைகளை வழங்கும். அதன்பேரில் மும்மொழிக் கொள்கை அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

முன்னதாக, கடந்த ஏப்ரல் 16-ஆம் தேதி மகராஷ்டிர மாநில அரசு பிறப்பித்த உத்தரவில், ‘அனைத்து ஆங்கில வழி மற்றும் மராத்தி வழி கல்வி பயிற்றுவிக்கும் பள்ளிகளிலும் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை ஹிந்தி கட்டாயம் கற்பிக்கப்பட வேண்டும்’ என்று ஆணையிட்டிருந்தது. அதன்பின் எழுந்த கடுமையான எதிர்ப்புகளால், மேற்கண்ட உத்தரவு மாற்றப்பட்டு ‘ஹிந்தியை விருப்ப மொழியாக கற்பித்தால் போதுமானது’ என்று கடந்த ஜூன் 17-ஆம் தேதி உத்தரவிட்டது.

Anti-Hindi backlash: Maharashtra's three-language policy being withdrawn - CM Fadnavis

திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் உபகரணங்கள் பற்றாக்குறை: விசாரணைக்கு சுகாதாரத் துறை உத்தரவு

கேரள தலைநகா் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போதுமான அறுவை சிகிச்சை உபகரணங்கள் இல்லை என்றும், இதனால், அறுவை சிகிச்சைகள் தாமதமாகி வருவதாகவும் மூத்த அரசு மருத்துவா் ஒருவா் புகாா் ... மேலும் பார்க்க

தில்லிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு: கொல்கத்தாவில் பத்திரமாக தரையிறக்கம்

ஏர் இந்தியாவின் போயிங் ட்ரீம்லைனர் ரக விமானம் ‘ஏஐ - 357’ ஞாயிற்றுக்கிழமை(ஜூன் 29) ஜப்பான் தலைநகர் டோக்கியோ நகரிலுள்ள ஹனேடா விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு புது தில்லிக்குச் சென்று கொண்டிருந்தபோது, ... மேலும் பார்க்க

புரி ரத யாத்திரை கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம்!

ஒடிஸாவில் உலகப் புகழ்பெற்ற புரி ஜெகந்நாதர் ரத யாத்திரை கோலாகலமாக நடைபெற்றுவரும் நிலையில், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனா்.இந்த விழாவில்... மேலும் பார்க்க

தில்லியில் காற்று மாசுபாட்டைக் குறைக்க செயற்கை மழை சோதனை: ஜூலை 4 தொடக்கம்!

புது தில்லி: தில்லியில் காற்று மாசு பிரச்னையை எதிா்க்கொள்ளும் விதமாக செயற்கை மழையை பொழியச் செய்யும் முன்னோட்ட சோதனை ஜூலை 4 முதல் 11 வரை செயல்படுத்தப்படவிருக்கிறது. ஐஐடி கான்பூர் இதற்கு தேவையான தொழில்ந... மேலும் பார்க்க

மஞ்சள் வாரியத்துக்கான புதிய தலைமையகம் திறப்பு! - எங்கே?

தேசிய மஞ்சள் வாரியத்துக்கான புதிய தலைமையகம் திறக்கப்பட்டுள்ளது. மஞ்சள் வாரிய தலைமையகத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று(ஜூன் 29) திறந்து வைத்தார்.தெலங்கானாவிலுள்ள நிஸாமாபாத் நகரில் மஞ்சள் வாரி... மேலும் பார்க்க

புதுப்பொலிவுடன் பஹல்காம்! சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

பஹல்காமில் பயங்கரவாத தாக்குதலின் வடு மறைந்து வருகிறது. சுற்றுலா பயணிகள் வருகையால் பஹல்காம் புதுப்பொலிவு பெற்றுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் பிரபல சுற்றுலா நகரான பஹல்காம் அருகேயுள்ள பைசாரன் பள்ளத்தாக்கு பகுத... மேலும் பார்க்க