செய்திகள் :

தில்லியில் காற்று மாசுபாட்டைக் குறைக்க செயற்கை மழை சோதனை: ஜூலை 4 தொடக்கம்!

post image

புது தில்லி: தில்லியில் காற்று மாசு பிரச்னையை எதிா்க்கொள்ளும் விதமாக செயற்கை மழையை பொழியச் செய்யும் முன்னோட்ட சோதனை ஜூலை 4 முதல் 11 வரை செயல்படுத்தப்படவிருக்கிறது.

ஐஐடி கான்பூர் இதற்கு தேவையான தொழில்நுட்ப உதவிகளை செய்கிறது. விமானத்திலிருந்து வான் வழியாக நிலப்பரப்பை நோக்கி செயற்கை ரசாயனங்கள் தூவி அதன்மூலம் சுமார் 90 நிமிஷங்கள் வரை செயற்கை மழைப்பொழிவை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இற்கான உரிய அனுமதி சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகத்திடம் பெறப்பட்டுள்ளதாக அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஒருமுறை மழைப்பொழிவு செய்வதற்கான செலவு ரூ. 3.21 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கு இந்திய வானிலை ஆய்வு துறையும் பங்களிப்பை வழங்குகிறது. முதல்கட்டமாக வடமேற்கு தில்லி மற்றும் தில்லி புறநகர் பகுதிகளில் செயற்கை மழை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

Artificial rain trial to reduce air pollution: Starts July 4!

தில்லிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு: கொல்கத்தாவில் பத்திரமாக தரையிறக்கம்

ஏர் இந்தியாவின் போயிங் ட்ரீம்லைனர் ரக விமானம் ‘ஏஐ - 357’ ஞாயிற்றுக்கிழமை(ஜூன் 29) ஜப்பான் தலைநகர் டோக்கியோ நகரிலுள்ள ஹனேடா விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு புது தில்லிக்குச் சென்று கொண்டிருந்தபோது, ... மேலும் பார்க்க

ஹிந்தி எதிர்ப்பு எதிரொலி: மகாராஷ்டிரத்தில் மும்மொழிக் கொள்கை திரும்பப் பெறப்பட்டதாக அறிவிப்பு!

மும்பை: மகாராஷ்டிரத்தில் மும்மொழிக் கொள்கை திரும்பப் பெறப்படுவதாக முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தலைமையிலான மாநில அரசு ஞாயிற்றுக்கிழமை(ஜூன் 29) அறிவித்துள்ளது. மகாராஷ்டிரத்தில் மும்மொழிக் கொள்கையை அமல்ப... மேலும் பார்க்க

புரி ரத யாத்திரை கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம்!

ஒடிஸாவில் உலகப் புகழ்பெற்ற புரி ஜெகந்நாதர் ரத யாத்திரை கோலாகலமாக நடைபெற்றுவரும் நிலையில், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனா்.இந்த விழாவில்... மேலும் பார்க்க

மஞ்சள் வாரியத்துக்கான புதிய தலைமையகம் திறப்பு! - எங்கே?

தேசிய மஞ்சள் வாரியத்துக்கான புதிய தலைமையகம் திறக்கப்பட்டுள்ளது. மஞ்சள் வாரிய தலைமையகத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று(ஜூன் 29) திறந்து வைத்தார்.தெலங்கானாவிலுள்ள நிஸாமாபாத் நகரில் மஞ்சள் வாரி... மேலும் பார்க்க

புதுப்பொலிவுடன் பஹல்காம்! சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

பஹல்காமில் பயங்கரவாத தாக்குதலின் வடு மறைந்து வருகிறது. சுற்றுலா பயணிகள் வருகையால் பஹல்காம் புதுப்பொலிவு பெற்றுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் பிரபல சுற்றுலா நகரான பஹல்காம் அருகேயுள்ள பைசாரன் பள்ளத்தாக்கு பகுத... மேலும் பார்க்க

கொல்கத்தாவில் மாணவி பாலியல் வன்கொடுமை: ‘தனியாகச் சென்ற மாணவி மீதே தவறு’ - ஆளுங்கட்சி எம்எல்ஏ மீது நடவடிக்கை!

கொல்கத்தா: கொல்கத்தாவில் கல்லூரி வளாகத்தில் மாணவி ஒருவரை 3 மாணவா்கள் வன்கொடுமை செய்ததாக புகார் அளிக்கப்பட்ட வழக்கில், பாதிக்கப்பட்ட மாணவி கல்லூரிக்கு தனியாகச் சென்றது தவறு என்று மேற்கு வங்கத்தில் ஆளும... மேலும் பார்க்க