செய்திகள் :

`பெற்றோரை இழந்த பெண்' - கறி விருந்து, சீர்வரிசை என திருமணத்தை நெகிழ வைத்த பத்திரப்பதிவுத்துறை ஐ.ஜி

post image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக இருந்த தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தற்போது பத்திரப்பதிவுத்துறை தலைவராக இருக்கிறார். இவர் மாவட்ட ஆட்சியராக இருந்த போது பேராவூரணி அருகே உள்ள ரெட்டவயல் கிராமத்தைச் சேர்ந்த பாண்டிமீனா என்பவரின் தந்தை நுரையீரல் பாதிப்பில் இறந்துவிட்டதையும், தாய் செல்வி சிறுநீரகம் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருவதையும், மனவளர்ச்சி குன்றிய தங்கையுடன் குடிசை வீட்டில் பாண்டிமீனா ஆதரவு கரம் நீட்ட யாருமின்றி தவித்து நின்றதையும் அறிந்திருக்கிறார். இதையடுத்து பாண்டி மீனாவின் வீட்டுக்கு நேரில் சென்ற தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் துயரம் சூழ்ந்திருக்கும் அவர்களது நிலையை கண்டு கலங்கினார்.

திருமணத்தை நடத்தி வைக்கும் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்

பின்னர், நர்சிங் படித்த பாண்டி மீனா குடும்பத்திற்கு அரசு சார்பில் வீடு கட்டி கொடுப்பதற்காக முயற்சி மேற்கொண்ட தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ. 2.40 லட்சம், தன் விருப்ப நிதியில் ரூ. 1.50 லட்சம், பேராவூரணி லன்யஸ் கிளப் சார்பில் சுமார் ரூ 1.50 லட்சம் நிதி உதவி பெற்று புதிய வீடு கட்டிக்கொடுத்தார். கடந்த 2022ம் ஆண்டு, புதுமனை புகுவிழா நடத்தி குத்துவிளக்கு ஏற்றி, பாண்டி மீனாவிடம் புதிய வீட்டை ஒப்படைத்தார்.

இதில் நெகிழ்ந்த பாண்டி மீனா குடும்பத்தினர், ``அப்பா இருந்து செய்ய வேண்டியதை நீங்க செய்திருக்கிறீர்கள் இனி நீங்க எனக்கு சார் கிடையாது அப்பா" எனக் கூப்பிட்டு ஆனந்த கண்ணீரை வெளிப்படுத்தினார் பாண்டிமீனா. அதன் பின்னர் புது வீடு, புது வாழ்க்கை என பாண்டி மீனா குடும்பத்தின் மீது வெளிச்சம் படர்ந்தது. இந்தநிலையில், பதவி உயர்வில் பத்திரப்பதிவுத்துறை தலைவராக சென்னைக்கு சென்றுவிட்டார் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.

தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்

அதன் பிறகும் பாண்டிமீனா குடும்பத்தின் மீது அக்கறையுடன் இருந்து தனி கனவம் செலுத்தி வழி நடத்தி வந்தார். இந்த நிலையில் பாண்டி மீனாவிற்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டது. தந்தையின் இடத்தில் இருந்து பாண்டி மீனாவுக்கும் அபிமன்யுவிற்கும் திருமணம் பேசி முடித்தார். அதன்படி பேராவூரணியில் இன்று திருமணம் நடைபெற்றது. பெற்றோரை இழந்த பாண்டி மீனாவிற்கு சீர்வரிசை பொருள்கள் உள்ளிட்ட அனைத்தையும் தன் சொந்த செலவில் செய்து கொடுத்து தந்தையாக முன் நின்று தன் கையால் மணமகனிடம் தாலி எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.

இதில் பாண்டி மீனா குடும்பத்தினர் நெகிழ்ந்தனர். இதையறிந்த பேராவூரணி மக்கள் தினேஷ் பொன்ராஜ் ஆலிபர் செயலைப் பாராட்டினர். இதுகுறித்து பாண்டி மீனா தரப்பில் பேசினோம், ``ஓட்டைகள் நிறைந்த அந்த குடிசை வீட்டில் வறுமை மட்டும் குடியிருந்தது. ஒத்த ஆளா குடும்பத்தைக் காக்க போராடினாள் பாண்டி மீனா. துயரம் நிறைந்த இவர்களது நிலை அறிந்த தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் சார், வீடு கட்டும் பணியை தன் கவனத்தில் செய்தார். வீட்டு வேலை நடக்கும்போதே பாண்டி மீனா அம்மா தவறிட்டாங்க. பெற்றோர் இல்லாமல் மன வளர்ச்சி குன்றிய தன் தங்கையுடன் தவித்த பாண்டி மீனாவுக்கு தாய், தந்தையாகி தாங்கிப் பிடித்தார்.

திருமண விழாவில் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்

வீட்டுப் பணிகள் முடிந்ததும் ஊரே மெய்ச்சுற மாதிரி பால் காய்ச்ச வைத்தார். பாண்டி மீனாவிற்கு புதிய வாழ்க்கையும், நம்பிக்கையும் கிடைத்தது. இந்த நிலையில் தஞ்சாவூரில் இருந்து அவர் பணிமாற்றலாகி சென்று இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் அப்பா மகள் உறவுக்கான பந்தம் எப்போதும் போல் தொடர்ந்தது. வீடு பால் பாய்ச்சிய அன்னைக்கு, `இனி நான் தான் உன் அப்பா என்ன வேணுமானாலும் எங்கிட்ட தயங்காமல் கேக்கணும்' என்றார். பாண்டி மீனாவும் அப்பா என்று தான் தினேஷ் சாரை அழைத்து வந்தார்.

இப்படியான சூழலில் தன் சொந்த மகளுக்குத் திருமணம் செய்து வைத்தது போல் மண்டபம் பிடித்து, பத்திரிகை அடிச்சு, கறி விருந்து வச்சு மணமக்கள் நிறைவாக வாழ்வதற்கு சீர் வரிசை பொருள்கள் வாங்கி வைத்து திருமணத்தை நடத்தி வைத்தார். தன்னார்வலர்கள், பேராவூரணி லயன்ஸ் சங்கத்தினர், முக்கியஸ்தர்கள் என பலரையும் அழைத்து குடும்ப விழாவாகவும் நடத்தினார். எல்லோருடனும் சேர்ந்து குரூப் போட்டோ எடுத்துக்கொண்டார். மாப்பிள்ளை கையில் பாண்டி மீனாவை பிடிச்சு கொடுத்து, நிறைய கண்ணீரை பார்த்துட்டாள், இனி அவ கண்ணுல ஒரு சொட்டு கண்ணீர் வராமல் பார்த்துகங்கன்னு தந்தைக்கே உரிய தவிப்புடன் சொன்னார்.

பாண்டி மீனாவை வாழ்த்தும் பத்திரப்பதிவுத்துறை ஐ.ஜி

பெற்றோரை இழந்த பாண்டி மீனாவிற்கு தந்தையாக இருந்து திருமணம் செய்து வைத்து வாழ்வில் ஒளி ஏற்றியிருக்கிறார் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர். அவரது செயல் எங்களை நெகிழ வைத்துள்ளது அவரோ, இது இறைவன் கொடுத்த வாய்ப்பு. ஒரு கூட்டு முயற்சியின் அற்புதமான எடுத்துக்காட்டு. பேராவூரணி லயன்ஸ் சங்கம் மற்றும் அனைத்து நல்ல உள்ளங்களால் இந்த அன்பு சாத்தியமானது என்கிறார்" என நெகிழ்ச்சியுடன் கூறினர்.

விகடன் செய்தி எதிரொலி: கோவை பாம்பு பிடி வீரர் சந்தோஷ் குடும்பத்துக்கு அரசு வீடு; உதவிய நல்லுள்ளங்கள்

கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்தவர் பாம்பு பிடி வீரர் சந்தோஷ்குமார். இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த மார்ச் மாதம் சந்தோஷ் ஒரு வீட்டுக்குள் புகுந்த நாகப்பாம்பை பிடிக்கும்போது, எதிர்ப... மேலும் பார்க்க

'மாற்றத்திற்கான ஒரு விருந்து' - நலிவுற்றோருக்கான நாளந்தாவே ஃபவுண்டேஷனின் புதிய முன்னெடுப்பு

எழுத்தாளர், சமூக தொழில்முனைவோர் என்ற பன்முக ஆளுமையாக அறியப்படும் திரு. ஸ்ரீராம் V அவர்களால் நிறுவப்பட்டது நாளந்தாவே ஃபவுண்டேஷன். இது 20 ஆண்டுகால சேவை பாரம்பரியத்தை கொண்ட இலாபநோக்கற்ற ஒரு அமைப்பாகும். ... மேலும் பார்க்க

மழை வெள்ளம்.. மன வெள்ளம் | குறுங்கதை

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

G Madhavi Latha: மாதவி லதாவின் 17 ஆண்டுகால உழைப்பு; உலகின் உயரமான ரயில் பாலத்தின் வேர் - யார் இவர்?

ஜம்மு காஷ்மீரில் ஈபிள் டவர் உயரத்தை (330 மீட்டர்) விடவும் உயரமாக கட்டப்பட்ட ரயில் பாலமான செனாப் பாலத்தை (359 மீட்டர்) கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 6) பிரதமர் மோடி திறந்து வைத்தார். தற்போது உலகின் மிக உயர... மேலும் பார்க்க

`அந்த 10 ரூபாய் இல்லனாலும்கூட..!’ - 10 ரூபாய் டாக்டர் ரத்தினம் மறைவு; சோகத்தில் பட்டுக்கோட்டை மக்கள்

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை மணிக்கூண்டு பகுதியில் கிளினிக் நடத்தி வந்தவர் டாக்டர் கனகரத்தினம். இவருடைய மனைவி ராஜலட்சுமி. இவர்களுக்கு மூன்று மகள்கள், ஒரு மகன். மகள்களுக்குத் திருமணமாகி வெவ்வேறு பக... மேலும் பார்க்க