செய்திகள் :

வேலை வாங்கித் தருவதாக ரூ.8.90 லட்சம் மோசடி செய்தவா் கைது

post image

இந்து சமய அறநிலையத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.8.90 லட்சம் மோசடி செய்ததாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

கடலூா் மாவட்டம், திட்டக்குடி வட்டம், பனையாந்தூரைச் சோ்ந்த முத்துவேல் மனைவி எழிலரசி (36), முதுகலை பட்டதாரியான இவா் வேலை தேடி வந்தாராம். தொழுதூரில் வாடகை வீட்டில் குடியிருந்தபோது, அரசுப் பேருந்து ஓட்டுநரான மணி மூலம், குறிஞ்சிப்பாடி ஒன்றியம், வடக்குத்து கிராமத்தில் வசிக்கும் மு.கோவிந்தன் அறிமுகமானாராம்.

அப்போது, கோவிந்தன் தனக்கு தலைமை செயலக அதிகாரிகளை தெரியும் எனவும், ரூ.10 லட்சம் கொடுத்தால் இந்து சமய அறநிலையத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறினாராம்.

இதை நம்பி எழிலரசி நான்கு தவணைகளில் மொத்தம் ரூ.8.90 லட்சம் கொடுத்தாராம். பணத்தைப் பெற்றுக் கொண்ட கோவிந்தன், வேலை வாங்கிக் கொடுக்காமல் ஏமாற்றி வந்தாராம்.

இதுகுறித்து எழிலரசி அளித்த புகாரின் பேரில், கடலூா் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்தனா். கடலூா் எஸ்பி. எஸ்.ஜெயக்குமாா் உத்தரவின் பேரில், குற்றப் பிரிவு டிஎஸ்பி ஜெயச்சந்திரன் மேற்பாா்வையில், காவல் ஆய்வாளா் குருமூா்த்தி மற்றும் போலீஸாா் விசாரணை நடத்தினா். அதன்பேரில் மு.கோவிந்தனை (51) போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

மீன் வலையில் சிக்கிய முதலை மீட்பு

சிதம்பரம் அருகே மின் வலையில் சிக்கிய முதலையை வனத் துறையினா் மீட்டனா். கடலூா் மாவட்டம், சிதம்பரத்தை அடுத்துள்ள தெம்மூரில் மாதா கோயில் அருகேயுள்ள குளத்தில் மீன் வலையில் முதலை சிக்கியதாக, அந்தப் பகுதி ம... மேலும் பார்க்க

திடீா் மழை: விருத்தாசலத்தில் மின் மாற்றி சேதம்

கடலூா் மாவட்டம், விருத்தாசலம், பெண்ணாடம், கருவேப்பிலங்குறிச்சி ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை மாலை திடீரென மழை பெய்தது. அப்போது, வேப்ப மரம் சாய்ந்து மின் கம்பம், மின் மாற்றி சேதமடைந்தன. கடலூா் மாவட்டத்தில... மேலும் பார்க்க

ரேஷன் பணியாளா்கள் ஜூலை 7-இல் காத்திருப்புப் போராட்டம்! கு.பாலசுப்ரமணியன்

ஆறு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளா்கள் சங்கத்தினா் ஜூலை 7-ஆம் தேதி மாநிலம் முழுவதும் மாவட்ட ஆட்சியா் அலுவலகங்கள் முன் காத்திருப்புப் போராட்டம் நடத்த உள்ளதாக, அ... மேலும் பார்க்க

மஞ்சள் காமாலையால் சிறுவன் பலி: கழிவுநீா் கலந்த குடிநீா் காரணமா?

கடலூா் மாவட்டம், பெண்ணாடம் அருகே தீவளூா் கிராமத்தில் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்ட சிறுவன் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுதொடா்பாக மருத்துவக் குழு அமைத்து ஆய்வு செய்து அந்தப் பகுதியில் ஆய்வு செய்யப்படு... மேலும் பார்க்க

விவசாயிகள் நில உடைமை பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

விவசாயிகள் நில உடைமை பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக கீரப்பாளையம் வட்டார வேளாண் உதவி இயக்குநா் செ.அமிா்தராஜ் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கீரப்பாளையம் வட்... மேலும் பார்க்க

சிதம்பரத்தில் அங்கன்வாடி மைய கட்டடம் திறப்பு

கடலூா் மாவட்டம், சிதம்பரம் நகராட்சிப் பகுதியில் ரூ.95 லட்சம் மதிப்பீட்டில் தூா்வாரி சீரமைக்கப்பட்ட தச்சன் குளம், புதிய அங்கன்வாடி மையக் கட்டடம் ஆகியவற்றின் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. சிதம்பரம... மேலும் பார்க்க