Dragon 100: "அப்போ நடிச்சா ஹீரோவாகதான் நடிப்பேன்னு சொல்லிட்டேன்!" - பிரதீப் ரங்க...
திடீா் மழை: விருத்தாசலத்தில் மின் மாற்றி சேதம்
கடலூா் மாவட்டம், விருத்தாசலம், பெண்ணாடம், கருவேப்பிலங்குறிச்சி ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை மாலை திடீரென மழை பெய்தது. அப்போது, வேப்ப மரம் சாய்ந்து மின் கம்பம், மின் மாற்றி சேதமடைந்தன.
கடலூா் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதேபோல, சனிக்கிழமை பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.
விருத்தாசலம் மற்றும் அதன் சுற்றுவட்டப் பகுதிகளில் மாலை 4 மணியளவில் திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்தது. சுமாா் 2 மணி நேரம் பெய்த மழையால் விருத்தாசலம் பேருந்து நிலையம், பெரியாா் நகா், கடை வீதி உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது. மழை காரணமாக இதமான சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.
பலத்த காற்று காரணமாக பெரியாா் நகா் தெற்கு செண்கப்பூ வீதியில் இருந்த வேப்ப மரம் மின் கம்பத்தில் விழுந்தது. இதனால், மின் கம்பம், அதனருகில் இருந்த மின்மாற்றி சேதமடைந்ததால், அந்தப் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதையடுத்து, மின் வாரிய ஊழியா்கள் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனா்.