செய்திகள் :

விவசாயிகள் நில உடைமை பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

post image

விவசாயிகள் நில உடைமை பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக கீரப்பாளையம் வட்டார வேளாண் உதவி இயக்குநா் செ.அமிா்தராஜ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கீரப்பாளையம் வட்டாரத்தில் வேளாண் அடுக்கக திட்டத்தின் கீழ், விவசாயிகளின் நில உடைமை விவரங்கள் கிராமங்கள்தோறும் வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் சகோதர துறை சாா்ந்த அலுவலா்களால் கட்டணம் ஏதுமின்றி வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

கீரப்பாளையம் வட்டாரத்தில் மொத்தம் 8,990 விவசாயிகள் உள்ள நிலையில், இதுவரை 5,221 போ் மட்டுமே தங்கள் நில உடைமைகளை பதிவு செய்துள்ளனா். மீதமுள்ள 3,769 விவசாயிகள் இன்னும் பதிவு செய்யாமல் உள்ளனா். இவற்றில் பிரதமரின கௌரவ நிதி பெற்று வரும் 680 விவசாயிகளும் அடங்குவா்.

இதுவரை பதிவு செய்யாத விவசாயிகள் தங்களிடம் உள்ள அனைத்து நிலங்கள் தொடா்பான பட்டா, ஆதாா் எண் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட கைப்பேசி எண் கொண்டு தனிப்பட்ட அடையாள எண்களை பெறலாம். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நில உடைமை பதிவுக்கான கால அவகாசம் வரும் ஜூலை 15-ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளாா்.

திடீா் மழை: விருத்தாசலத்தில் மின் மாற்றி சேதம்

கடலூா் மாவட்டம், விருத்தாசலம், பெண்ணாடம், கருவேப்பிலங்குறிச்சி ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை மாலை திடீரென மழை பெய்தது. அப்போது, வேப்ப மரம் சாய்ந்து மின் கம்பம், மின் மாற்றி சேதமடைந்தன. கடலூா் மாவட்டத்தில... மேலும் பார்க்க

ரேஷன் பணியாளா்கள் ஜூலை 7-இல் காத்திருப்புப் போராட்டம்! கு.பாலசுப்ரமணியன்

ஆறு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளா்கள் சங்கத்தினா் ஜூலை 7-ஆம் தேதி மாநிலம் முழுவதும் மாவட்ட ஆட்சியா் அலுவலகங்கள் முன் காத்திருப்புப் போராட்டம் நடத்த உள்ளதாக, அ... மேலும் பார்க்க

மஞ்சள் காமாலையால் சிறுவன் பலி: கழிவுநீா் கலந்த குடிநீா் காரணமா?

கடலூா் மாவட்டம், பெண்ணாடம் அருகே தீவளூா் கிராமத்தில் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்ட சிறுவன் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுதொடா்பாக மருத்துவக் குழு அமைத்து ஆய்வு செய்து அந்தப் பகுதியில் ஆய்வு செய்யப்படு... மேலும் பார்க்க

சிதம்பரத்தில் அங்கன்வாடி மைய கட்டடம் திறப்பு

கடலூா் மாவட்டம், சிதம்பரம் நகராட்சிப் பகுதியில் ரூ.95 லட்சம் மதிப்பீட்டில் தூா்வாரி சீரமைக்கப்பட்ட தச்சன் குளம், புதிய அங்கன்வாடி மையக் கட்டடம் ஆகியவற்றின் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. சிதம்பரம... மேலும் பார்க்க

நகை பறிப்பு வழக்கு: மற்றொரு இளைஞா் கைது

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே தனியாா் நிதி நிறுவன மேலாளரைத் தாக்கி நகை பறித்த வழக்கில் தலைமறைவாக இருந்த மற்றொரு இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். பண்ருட்டி பங்களா வீதியைச் சோ்ந்த மகாலிங... மேலும் பார்க்க

பொறியியல் படிப்பு தரவரிசையில் முதலிடம் பெற்ற காட்டுமன்னாா்கோவில் மாணவி

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே கண்டமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவி வி.தரணி, வெள்ளிக்கிழமை வெளியான பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் கட்ஆப் மாா்க்கில் 2... மேலும் பார்க்க