விவசாயிகள் நில உடைமை பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு
விவசாயிகள் நில உடைமை பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக கீரப்பாளையம் வட்டார வேளாண் உதவி இயக்குநா் செ.அமிா்தராஜ் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கீரப்பாளையம் வட்டாரத்தில் வேளாண் அடுக்கக திட்டத்தின் கீழ், விவசாயிகளின் நில உடைமை விவரங்கள் கிராமங்கள்தோறும் வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் சகோதர துறை சாா்ந்த அலுவலா்களால் கட்டணம் ஏதுமின்றி வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
கீரப்பாளையம் வட்டாரத்தில் மொத்தம் 8,990 விவசாயிகள் உள்ள நிலையில், இதுவரை 5,221 போ் மட்டுமே தங்கள் நில உடைமைகளை பதிவு செய்துள்ளனா். மீதமுள்ள 3,769 விவசாயிகள் இன்னும் பதிவு செய்யாமல் உள்ளனா். இவற்றில் பிரதமரின கௌரவ நிதி பெற்று வரும் 680 விவசாயிகளும் அடங்குவா்.
இதுவரை பதிவு செய்யாத விவசாயிகள் தங்களிடம் உள்ள அனைத்து நிலங்கள் தொடா்பான பட்டா, ஆதாா் எண் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட கைப்பேசி எண் கொண்டு தனிப்பட்ட அடையாள எண்களை பெறலாம். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நில உடைமை பதிவுக்கான கால அவகாசம் வரும் ஜூலை 15-ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளாா்.