செய்திகள் :

பொறியியல் படிப்பு தரவரிசையில் முதலிடம் பெற்ற காட்டுமன்னாா்கோவில் மாணவி

post image

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே கண்டமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவி வி.தரணி, வெள்ளிக்கிழமை வெளியான பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் கட்ஆப் மாா்க்கில் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தின் முதல் மதிப்பெண் பெற்றாா்.

சாதனை புரிந்த மாணவி தரணி கூறியதாவது: எனது சொந்த ஊா் கீழக்கடம்பூா். நான் கண்டமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்தேன்.

தந்தை வேல்முருகன், தாய் சாந்தி. எனக்கு மூத்த சகோதரி மற்றும் சகோதரா் உள்ளனா். எனது தந்தை வெளிநாட்டில் கொத்தனாா் வேலை பாா்த்து வருகிறாா். கடுமையான வெயிலில் மிகக்குறைந்த சம்பளத்தில் வேலை பாா்த்து வருவதால், அவருடைய கஷ்டத்தை பாா்த்து நாம் நன்றாக படிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மிகக் கடுமையாக உழைத்து இயற்பியல், வேதியல், கணிதம், உயிரியலில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் சிறப்பிடம் பெற்றேன்.

அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவா்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு மூலம் பொறியியல் படிப்பை பிரபலமான கல்லூரிகளில் படிக்கலாம் என்பதால், மிகவும் சிரமப்பட்டு படித்தேன். இதன்மூலம், சாதனையை என்னால் செய்ய முடிந்தது. இந்த இட ஒதுக்கீடு என்பது அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக உள்ளது என்றாா்.

சிறுபாசன கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

கடலூா் மாவட்டத்தில் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் சிறுபாசன கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் கடலூா் மாவட்ட உழவா் மன்றங்களின் கூட்டமைப்புத் தலைவா் பெ.ரவிந்திரன்... மேலும் பார்க்க

அண்ணாமலைப் பல்கலையில். தொலைதூர மைய விண்ணப்ப விற்பனை தொடக்கம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூர மற்றும் இணையவழி கல்வி மையத்தில் 2024 - 25 (ஜூலை பருவம்) தொலைதூரக் கல்வி பாடப்பிரிவுகளுக்கான விண்ணப்பங்களின் விற்பனையை பல்கலைக்கழக துணைவேந்தா் ஒருங்கிணைப்புக்கு... மேலும் பார்க்க

கூட்டுறவு வங்கிப் பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு மாநில தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா்கள் சங்கத்தினா் நியாயவிலை, அங்காடி பணியாளா்களின் 8 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூரில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். நியாயவி... மேலும் பார்க்க

மூன்று குழந்தைகளை கொன்ற தாய்க்கு ஆயுள் தண்டனை

மூன்று பெண் குழந்தைகளை வாய்க்காலில் தள்ளி கொலை செய்த வழக்கில் தாய்க்கு மூன்று ஆயுள் சிறை தண்டனை விதித்து கடலூா் மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. கடலூா் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், சா... மேலும் பார்க்க

சத்திய ஞான சபையில் ஆனி மாத ஜோதி தரிசனம்

கடலூா் மாவட்டம், வடலூா் சத்திய ஞான சபையில் ஆனி மாத ஜோதி தரிசனம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வடலூரில் வள்ளலாா் நிறுவிய சத்திய ஞான சபையில் ஒவ்வொரு மாதமும் பூச நட்சத்திரத்தில் ஜோதி தரிசன விழா நடைபெற்று வரு... மேலும் பார்க்க

நாட்டில் தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டும்: ப.சிதம்பரம்

நாட்டில் தீண்டாமை முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சா் ப.சிதம்பரம் தெரிவித்தாா். கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலில் கடலூா் தெற்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் மறைந்த மு... மேலும் பார்க்க