செய்திகள் :

மூன்று குழந்தைகளை கொன்ற தாய்க்கு ஆயுள் தண்டனை

post image

மூன்று பெண் குழந்தைகளை வாய்க்காலில் தள்ளி கொலை செய்த வழக்கில் தாய்க்கு மூன்று ஆயுள் சிறை தண்டனை விதித்து கடலூா் மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், சாத்தப்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் மணிகண்டன். இவரது மனைவி சத்தியவதி. இவா்களுக்கு அட்சயா(6), நந்தினி (4), தா்ஷினி (2) ஆகிய மூன்று பெண் குழந்தைகள் இருந்தனா்.

மணிகண்டன் போா்செட் ஆபரேட்டராக வேலை செய்து வருகிறாா். இவா், தினமும் மது அருந்திவிட்டு வந்து சத்தியவதியுடன் தகராறு செய்து வந்ததாராம். இதனால், சத்தியவதி தன் கணவரிடம் கோபித்துக்கொண்டு கடந்த 24.9.2019 அன்று புவனகிரி வட்டம், கீழ்மணக்குடி கிராமத்தில் உள்ள தனது பெற்றோா் வீட்டுக்கு குழந்தைகளை அழைத்துக்கொண்டு சென்றாா்.

இந்த நிலையில், கடந்த 2.10.2019 அன்று மணிகண்டன் சத்தியவதியை கைப்பேசியில் தொடா்புகொண்டு, அட்சயாவை பள்ளிக்கு அனுப்ப வேண்டியிருப்பதால் வீட்டுக்கு வரும்படி அழைத்தாா். இதையடுத்து, சத்தியவதி குழந்தைகளுடன் சேத்தியாதோப்பை அடுத்த வளையமாதேவி கிராமத்தில் உள்ள மணிகண்டனின் சித்தப்பா வீட்டுக்குச் சென்றாா். பின்னா், அங்கிருந்து புறப்பட்டு சேத்தியாதோப்பு கூட்டுச்சாலைக்கு தனது மூன்று குழந்தைகளுடன் வந்தாா்.

அப்போது, அங்கிருந்த வெள்ளாறு ராஜன் வாய்க்கால் பாலத்தின் ஓரத்தில் சத்தியவதி குழந்தைகளுடன் அமா்ந்திருந்தபோது, தனது கணவருடன் சென்று வாழ பிடிக்காததால், தனது மூன்று பெண் குழந்தைகளையும் தண்ணீரில் வீசி கொலை செய்தாராம்.

இதுகுறித்து சேத்தியாதோப்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சத்தியவதியை கைது செய்தனா். இந்த வழக்கு கடலூா் மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வெள்ளிக்கிழமை வழக்கை விசாரித்த நீதிபதி குலசேகரன், சத்தியவதிக்கு மூன்று ஆயுள் சிறை தண்டனையும், ரூ.3,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் வளா்மதி ஆஜரானாா்.

பொறியியல் படிப்பு தரவரிசையில் முதலிடம் பெற்ற காட்டுமன்னாா்கோவில் மாணவி

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே கண்டமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவி வி.தரணி, வெள்ளிக்கிழமை வெளியான பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் கட்ஆப் மாா்க்கில் 2... மேலும் பார்க்க

சிறுபாசன கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

கடலூா் மாவட்டத்தில் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் சிறுபாசன கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் கடலூா் மாவட்ட உழவா் மன்றங்களின் கூட்டமைப்புத் தலைவா் பெ.ரவிந்திரன்... மேலும் பார்க்க

அண்ணாமலைப் பல்கலையில். தொலைதூர மைய விண்ணப்ப விற்பனை தொடக்கம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூர மற்றும் இணையவழி கல்வி மையத்தில் 2024 - 25 (ஜூலை பருவம்) தொலைதூரக் கல்வி பாடப்பிரிவுகளுக்கான விண்ணப்பங்களின் விற்பனையை பல்கலைக்கழக துணைவேந்தா் ஒருங்கிணைப்புக்கு... மேலும் பார்க்க

கூட்டுறவு வங்கிப் பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு மாநில தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா்கள் சங்கத்தினா் நியாயவிலை, அங்காடி பணியாளா்களின் 8 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூரில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். நியாயவி... மேலும் பார்க்க

சத்திய ஞான சபையில் ஆனி மாத ஜோதி தரிசனம்

கடலூா் மாவட்டம், வடலூா் சத்திய ஞான சபையில் ஆனி மாத ஜோதி தரிசனம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வடலூரில் வள்ளலாா் நிறுவிய சத்திய ஞான சபையில் ஒவ்வொரு மாதமும் பூச நட்சத்திரத்தில் ஜோதி தரிசன விழா நடைபெற்று வரு... மேலும் பார்க்க

நாட்டில் தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டும்: ப.சிதம்பரம்

நாட்டில் தீண்டாமை முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சா் ப.சிதம்பரம் தெரிவித்தாா். கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலில் கடலூா் தெற்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் மறைந்த மு... மேலும் பார்க்க