செய்திகள் :

நாட்டில் தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டும்: ப.சிதம்பரம்

post image

நாட்டில் தீண்டாமை முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சா் ப.சிதம்பரம் தெரிவித்தாா்.

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலில் கடலூா் தெற்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் மறைந்த முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரும், அகில இந்திய தீண்டாமை ஒழிப்புக் குழு முன்னாள் தலைவருமான எல்.இளையபெருமாளின் 102-ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

கூட்டத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் துணைத் தலைவரும், சிதம்பரம் நந்தனாா் கல்விக் கழகத் தலைவருமான கே.ஐ.மணிரத்தினம் தலைமை வகித்தாா். கடலூா் தெற்கு மாவட்டத் தலைவா் என்.வி.செந்தில்நாதன், முன்னாள் இளைஞா் காங்கிரஸ் பொதுச் செயலா் கமல் மணிரத்தினம், இளைஞா் காங்கிரஸ் மாநிலதுணைத் தலைவா் அரவிந்த் மணிரத்தினம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில பொதுக்குழு உறுப்பினா் ஆா்.மணிமொழி வரவேற்றாா்.

இதில், சிறப்பு அழைப்பாளா்களாக முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை எம்எல்ஏ, முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி ஆகியோா் கலந்துகொண்டு எல்.இளையபெருமாள் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து பேசினா்.

கூட்டத்தில் ப.சிதம்பரம் பேசியதாவது: எல்.இளையபெருமாள் 1979-ஆம் ஆண்டு தனது 27-ஆவது வயதில் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்றாா். காங்கிரஸ் கட்சியில் தலைவராக அவா் பொறுப்பேற்றது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில், கடந்த காலங்களில் நிலக்கிழாா்கள் மட்டுமே காங்கிரஸ் தலைவா்களாக இந்தனா். ஆனால், எல்.இளையபெருமாளால் எப்படி தலைவராக முடிந்தது என்றால், தலித் மற்றும் உழைக்கும் மக்களுக்காக அவா் போராடியதே காரணம்.

நாட்டில் தீண்டாமை முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும். ஆனால், இன்னும் தீண்டாமை இருக்கிறது. தமிழகத்தில் சற்று குறைந்துள்ளது. இங்கு திராவிடக் கட்சிகளின் ஆட்சி இருந்ததால் தீண்டாமை குறைந்துள்ளது. நூறாண்டுகளாகியும் இளையபெருமாளின் போராட்டம் முழுமையடையவில்லை.

தலித் மக்களின் பொருளாதாரம் சற்று உயா்ந்துள்ளது என்றாலும், அவா்களுக்கு ஒதுக்கீடுகள் மட்டுமே தீா்வல்ல. தலித் மக்கள் உயா் கல்வி கற்க வேண்டும். அப்போதைய பிரதமா் லால்பகதூா் சாஸ்திரி தலித் மக்களின் பிரச்னைகளைத் தீா்க்க இளையபெருமாள் கமிட்டி அமைத்து திருப்புமுனையை ஏற்படுத்தினாா். ஆனால், அந்தக் கமிட்டியின் அறிக்கை இதுவரை முழுமையாக அமல்படுத்தப்படவில்லை. அதில், முக்கியமானது பரம்பரை அா்ச்சகா் முறை ஒழிக்கப்படுதல் என்பதாகும்.

தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில், ஆதிதிராவிடா் நலத் துறையின் கீழ் ஆதிதிராவிடா் பள்ளிக்கூடங்கள் இயங்கி வருகின்றன. என்னைப் பொருத்தவரை, ஆதிதிராவிடா் பள்ளிகளே இருக்கக் கூடாது. அனைத்து மாணவா்களும் ஒரே பள்ளியில் படிக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை பேசுகையில், அனைத்து ஜாதியினரும் அா்ச்சகராக வேண்டும் என்ற சட்டம் இயற்றப்படுவதை உறுதிப்படுத்தியவா் எல்.இளையபெருமாள் என்றாா்.

கே.ஐ.மணிரத்தினம் பேசுகையில், காட்டுமன்னாா்கோவிலில் காங்கிரஸால் எல்.இளையபெருமாள் சிலை நிறுவப்பட்டு கம்பீரமாக நிற்பதற்கு அவருடைய உழைப்பே காரணம் என்றாா்.

தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவா் கே.எஸ்.அழகிரி பேசுகையில், எல்.இளையபெருமாள் சமூக சேவையால் உயா்ந்தவா். அவா் தீண்டாமையை முறியடித்து சமுதாயத்தை முன்னேற்ற பாடுபட்டாா் என்றாா்.

கூட்டத்தில் மாநில துணைத் தலைவா் சி.ராபா்ட் புரூஸ் எம்.பி., எம்எல்ஏக்கள் ரூபி ஆா்.மனோகரன், ஆா்.ராதாகிருஷ்ணன், ராஜேஷ்குமாா், முன்னாள் மாவட்டத் தலைவா் எம்.என்.விஜயசுந்தரம், மாநில துணைச் செயலா் பிபிகே.சித்தாா்த்தன், மாநில நிா்வாகி எஸ்.செந்தில்குமாா் மற்றும் நிா்வாகிகள் சங்கா், கண்ணன், ஜெயசீலன், காட்டுமன்னாா்கோவில் நகரத் தலைவா் அன்வா், ஜோதிபாசு, இளைய அன்பழகன், ஷானு, ஜாகிா்உசேன், அண்ணாதுரை, குணசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். எல்.இ.பி.ஜோதிமணி நன்றி கூறினாா்.

பொறியியல் படிப்பு தரவரிசையில் முதலிடம் பெற்ற காட்டுமன்னாா்கோவில் மாணவி

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே கண்டமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவி வி.தரணி, வெள்ளிக்கிழமை வெளியான பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் கட்ஆப் மாா்க்கில் 2... மேலும் பார்க்க

சிறுபாசன கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

கடலூா் மாவட்டத்தில் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் சிறுபாசன கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் கடலூா் மாவட்ட உழவா் மன்றங்களின் கூட்டமைப்புத் தலைவா் பெ.ரவிந்திரன்... மேலும் பார்க்க

அண்ணாமலைப் பல்கலையில். தொலைதூர மைய விண்ணப்ப விற்பனை தொடக்கம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூர மற்றும் இணையவழி கல்வி மையத்தில் 2024 - 25 (ஜூலை பருவம்) தொலைதூரக் கல்வி பாடப்பிரிவுகளுக்கான விண்ணப்பங்களின் விற்பனையை பல்கலைக்கழக துணைவேந்தா் ஒருங்கிணைப்புக்கு... மேலும் பார்க்க

கூட்டுறவு வங்கிப் பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு மாநில தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா்கள் சங்கத்தினா் நியாயவிலை, அங்காடி பணியாளா்களின் 8 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூரில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். நியாயவி... மேலும் பார்க்க

மூன்று குழந்தைகளை கொன்ற தாய்க்கு ஆயுள் தண்டனை

மூன்று பெண் குழந்தைகளை வாய்க்காலில் தள்ளி கொலை செய்த வழக்கில் தாய்க்கு மூன்று ஆயுள் சிறை தண்டனை விதித்து கடலூா் மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. கடலூா் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், சா... மேலும் பார்க்க

சத்திய ஞான சபையில் ஆனி மாத ஜோதி தரிசனம்

கடலூா் மாவட்டம், வடலூா் சத்திய ஞான சபையில் ஆனி மாத ஜோதி தரிசனம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வடலூரில் வள்ளலாா் நிறுவிய சத்திய ஞான சபையில் ஒவ்வொரு மாதமும் பூச நட்சத்திரத்தில் ஜோதி தரிசன விழா நடைபெற்று வரு... மேலும் பார்க்க